districts

மதுரை முக்கிய செய்திகள்

ஷோ ரூம் பூட்டை உடைத்து புதிய பைக் திருட்டு

காரியாபட்டி, அக்.12- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தனியார் திரு மண மண்டபம் அருகே இரு சக்கர வாகன விற்பனை நிலை யம் உள்ளது. இங்குள்ள ஷோ ரூமில் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான பைக் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டது.  கடையின் உரிமையாளர் செந்தில்குமார் (27) வழக்கம்  போல இரவு கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். மறு நாள் திரும்பி வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது,  அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருடு போனது  தெரியவந்தது. இதுகுறித்து செந்தில்குமார் காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பன்றிகளை அழிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, அக்.12- காட்டுப் பன்றிகளால் விவசாயத்தை நாசமாக்கும் பன்றிகளை அழித்து விவசாயிகளை பாதுகாக்கக் கோரி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் வீரபாண்டி தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் மோகன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளா ளர் விஸ்வநாதன், மாவட்ட துணைத் தலைவர் ஜெய ராமன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராமன், ஒன்றி யச் செயலாளர்கள் வேங்கையா, முத்துராமலிங்கம், ஒன்றியதலைவர் பரமாத்மா, காசிராஜன், ஈஸ்வரன், நீல மேகம், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டாசு ஆலைகள் பாதுகாப்பு விதிமுறைகளை  பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விருதுநகர், அக்.12- விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு  வரும் பட்டாசு ஆலைகள் உரிய பாது காப்பு விதிமுறைகளை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தீபாவளி பண்டிகை நெருங்குவதால் குறுகிய காலத்தில் உற்பத்தியை அதிகப்படுத்த பணியை விரைவாக மேற்கொள்வதாலும், அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை பணியமர்த்துவதாலும், பாதுகாப்பான செய்முறைகள் அறியாத புதிய நபர்களை பணியில் அமர்த்தி பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்படுவதே விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு காரணம் எனத் தெரிய வருகிறது. எனவே, மாவட்ட அளவிலான பாது காப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை, அவ்வப்போது பரிந்துரைக்கும் நேர்வில் பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு விற்பனை நிலையங்கள் மற்றும்  தனியார் பட்டாசு குடோன் உரிமையா ளர்கள் தவறாது பின்பற்ற வேண்டும்.  மேலும், பட்டாசு உற்பத்தி, பட்டாசு விற்பனை நிலையங்கள், பட்டாசு குடோன்  கள் நடத்துவோர், சட்ட விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை பின்பற்றவில்லையென ஆய்வுகளின் போது அறியப்பட்டால் உற்பத்தி தடை  மற்றும் விற்பனை நிலையங்கள் மூடுதல்  போன்ற கடும் நடவடிக்கை மேற்கொள் ளப்படும். எனவே, தொழிற்சாலை நிர்வாகங்கள் மற்றும் பட்டாசு விற்பனை மையங்கள் பாது காப்பு விதிமுறைகளையும், உரிய விதி களின்படி அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

வரிச்சியூர் செல்வம் ஜாமீன் கோரிய வழக்கு:  தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, அக்.12-  கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு  சிறையில் உள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமீன் கோரிய வழக்கில் ஜாமீன்  வழங்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை  வழக்கை தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வரிச்சியூர் செல்வம்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், ‘‘கடந்த செப்டம்பர் மாதம் சுகந்தா என்பவர் கூலி வேலைக்காக வெளி யூர் சென்ற தனது கணவர் புவனேஸ்வரன் வீடு திரும்பவில்லை என கூறி விருதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் மனுதாரர் குறித்து எந்தவித தக வல் இடம்பெறவில்லை. ஆனால் காவல்  துறை உள்நோக்கத்துடன் செயல்பட்டு ஆள்  காணவில்லை என்று புகார் அளிக்கப்படும் அனைத்து வழக்குகளிலும் தன்னை வழக்கில் சேர்த்து கைது செய்கிறார்கள்.  மேலும் கடந்த 5 வருடங்களாக தன்  மீது எவ்வித புதிய வழக்குகள் பதியப்பட வில்லை. மேலும் ஆள் காணவில்லை என  கூறும் வழக்கில் தனக்கும் எவ்வித சம்பந்  தம் இல்லாத நிலையில் தன்னை வழக்கில்  சேர்த்து கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளதால், தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில்,  மனுதாரர் மீது பல வழக்குகள் நிலுவை யில் உள்ளது. ஜாமீன் வழங்கினால் சாட்சி யங்கள் களைக்கப்பட்டு வழக்கு விசார ணையில் பாதிப்பு ஏற்படும். எனவே ஜாமீன்  வழங்க எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில்  வாதிடப்பட்டது, இதனைத் தொடர்ந்து மனுதாரருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை  தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.