தூத்துக்குடி, டிச.26- கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் கடந்த 16ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி நடை பெற்றது. இதில் தமிழகம் உட்பட 27 மாநில அணிகள் பங்கேற்று விளையாடின. 10-வது நாளான டிசம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற்ற மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுக்கான போட்டியில் ஒடிசா ,அரியானா அணிகள் மோதின. இதில் 3. 2 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை ஒடிசா அணி தோற்கடித்து மூன்றாம் இடத் தையும், அரியானா அணி நான்காம் இடம் பெற்றது. தொடர்ந்து களரி, மால்கம் உட்பட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன மாவட்ட காவல்துறை சார்பில் சிலம்பம் கரகாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டி யில் சண்டிகார், உத்தரபிரதேசம் அணிகள் மோதின. இதில் 3. 1 என்ற கோல் கணக்கில் உத்திரபிரதேசம் அணி வெற்றி பெற்று சாம்பி யன் பட்டத்தை பெற்று தங்க கோப்பையை வென்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழா விற்கு தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியின் சேர்மன் கனிமொழி எம்பி தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணியின ருக்கு கோப்பைகளை வழங்கினார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஆனந்த குமார், கேரளா ஹாக்கி தலைவர் சுனில் குமார் , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், யூனிட் ஆஃப் இந்தியா தமிழ்நாடு தலைவர் சேகர் மனோகரன் ,பொதுச் செயலாளர் பொறுப்பு செந்தில் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.