மணிப்பூரில் யெச்சூரி
மணிப்பூரில் பாதிக்கப் பட்டுள்ள மக்களை நேரில் சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தலைமையில் கட்சியின் திரிபுரா மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி, அசாம் மாநிலச் செயலாளர் சுப்ரகாஷ் தாலு க்தார், மத்தியக்குழு உறுப்பி னர் தேப்லினா ஹேம்ப்ராம் ஆகியோர் கொண்ட குழு வெள்ளியன்று இம்பால் சென்றடைந்தது.
திருச்சியில் இன்று வள்ளலார் -200, வைக்கம்-100 திருவிழா
திருச்சி, ஆக.18- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கத்தின் திருச்சி மாவட்டக் குழு சார்பில் வள்ளலார் - 200, வைக்கம் -100 கலை இலக்கிய திருவிழா ஆக.19 சனிக்கிழமையன்று நடை பெறுகிறது. ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள செயி ண்ட் ஜேம்ஸ் பள்ளி திறந்த வெளி கலையரங்கத்தில் மாலை 4மணிக்கு நிகழ்ச்சி கள் துவங்குகின்றன. இவ்விழாவில் ஆ.ராசா எம்.பி., சு.வெங்கடேசன் எம்.பி., திரைக்கலைஞர் ரோகிணி, ஆதவன் தீட் சண்யா, கவிஞர் நந்தலாலா, கரு. ஆறுமுகத்தமிழன், திரை இயக்குநர்கள் தமிழ், கவுதம் ராஜ் உள்ளிட்டோர் பங் கேற்று உரையாற்றவுள்ள னர். திரைப்பட கலைஞர்கள் செந்தில் கணேஷ், இராஜ லெட்சுமி, மக்களிசை பாடல்கள், புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன்- செந்தில் நை யாண்டி தர்பார், திருச்சி ட்விலைட் டான்ஸ் ஸ்டூடியோ குழுவினரின் நடனம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கவிஞர் தமிழ்ஒளி, நீதியர சர் கே.சந்துரு, பேராசிரியர் அருணன் ஆகியோரது நூல் கள் வெளியிடப்படவுள்ளன. அருட்தந்தை டி.யூஜின் அடிகளார், இமாம் அலி, வழக்கறிஞர் வி.ரங்கராஜன், சிவ.வெங்கடேஷ் ஆகியோ ரும் உரையாற்றவுள்ளனர்.
கடலோர மேலாண்மை திட்டம் மீதான கருத்துக் கேட்பு கூட்டம் ரத்து
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங் களில் நடைபெற இருந்த மண்டல மேலாண்மை திட்டம் மீதான கருத்துக் கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் நடைபெற இருந்த கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் மீதான கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி புதிய விரைவு ரயில் இயக்கம்
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே புதிய விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவிப்பு தெரிவித்துள்ளது. எர்ணாகுளத்துக்கு திங்கள், சனிக்கிழமை மற்றும் வேளாங் கண்ணிக்கு செவ்வாய், ஞாயிற்றுக் கிழமையும் ரயில் இயக்கப்படவுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும் என்று தெரிவித்துள்ளனர். வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புப் பட்டியலில் பிஏ.2.86 கொரோனா வைரஸ்
கடந்த சில நாட்களாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா வைரஸ் ஆட்டத்தை துவங்கி யுள்ள நிலையில், பிஏ.எக்ஸ் (BA.X) கொரோனா வைரஸின் திரிபான பிஏ.2.86 (BA.2.86) வகை வைரஸை தீவிரமாக கண்காணித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது தீவிர ஆபத்தை விளைவிக்கக் கூடிய கண்காணிப்பு வைரஸ் பட்டியலில் பிஏ.2.86 உள்ளது. பிஏ.2.86 டென்மார்க், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்று
சென்னை, ஆக.18- தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலை யில், வெள்ளிக்கிழமை (ஆக.18) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. அதன் படி, காலை 10 மணி முதல் மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்று பெற்று சென்றனர்.
5 நாட்கள் மிதமான மழை பெய்யும்
சென்னை, ஆக. 18- தமிழ்நாட்டில் ஆக. 23 வரைக்கும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் திருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் பா.செந்தா மரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,“தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசைக்காற்றில் வேக மாறு பாடு ஏற்பட்டு உள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஆக. 19 முதல் 23 ஆம் தேதி வரை சில இடங்க ளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்திருக் கிறார்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு
சென்னை, ஆக.18- குரூப் 4 தேர்வில் அடங்கிய 3,373 தட்டச்சர் பதவிக்கான மூலச் சான்றிதழ் கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆக.21 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணை யம் அறிவித்துள்ளது. 1079 சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் நவ.20 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கலந்தாய்வில் காலியாக உள்ள விஏஓ (கிராம நிர்வாக அலுவலர்) உள்ளிட்ட 47 பதவி கள் இதில் நிரப்பப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.
9 மாத கர்ப்பிணி சிலம்பம் சுற்றி சாதனை
சென்னை, ஆக.18- சென்னை சைதாப்பேட்டை சின்ன மலை பகுதியை சேர்ந்தவர் சுதா (36) யோகா பயிற்சியாளர். சுதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். யோகா கற்றுக் கொண்ட போதிலும் சிறு வயது முதலே சிலம்பம் மீது பற்றுக் கொண்ட இவர் அதில் சாதனை படைக்க விரும் பினார். தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை 1 மணி நேரம் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள்வாள், மான் கொம்பு ஆகியவற்றை இடைவிடாமல் சுற்றி அசத்தினார். இவரது இச்சாதனை நோபல் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.
இலங்கையிலிருந்து சென்னை திரும்பிய மீனவர்கள்
சென்னை, ஆக.18- இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியிலிருந்து இரண்டு விசைப்படகு களில் 9 மீனவர்கள், கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி அதிகாலையில், கச்சத்தீவு -நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சிறையில் அடைத்தனர். ஒன்றிய, மாநில அரசின் நடவடிக்கையால் விடு தலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், அனைவரும் வெள்ளியன்று (ஆக.18) கொழும்பு நகரில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.
உயிரி ஆயுத திட்டங்களில் அமெரிக்க தீவிரச் செயல்பாடு
மாஸ்கோ, ஆக. 18 - அமெரிக்காவின் உயிரி ராணுவ செயல்பாடுகள் பற்றிய ஆய்வு குறித்து ரஷ்ய கதிர் வீச்சு, வேதியியல் மற்றும் உயிரிப் பாதுகாப்புப் படையின் தளபதி கிரில்லோவ் புதனன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். அவர் கூறுகையில், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட “உள்ளார்ந்த ஆற்றல்” கொண்ட உயிரி ஆயுதங்களை அமெரிக்க ராணு வத்தின் தொடர்புடைய திட்டங்கள் ஆய்வு செய்துள்ளன. அதோடு, உலகின் பல இடங்களிலிருந்து அபாயகரமான நோய்கிருமி களைச் சேகரித்தல், பதிவு செய்யாத மருந்துகளின் சோதனை உள்ளிட்ட செயல்பாடுகளில் ஃபோர்ட் டெட்ரிக்கில் உள்ள அமெரிக்க தரைப்படையின் தொற்றுநோய் ஆய்வு மையம் நேரடியாக ஈடுபட்டுள்ளது என்று ரஷ்யாவுக்குக் கிடைத்த ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது என்றார். தொற்றுநோய்களை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் மீது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக த்திற்கு ஆர்வம் உண்டு. அதே வேளை, அமெ ரிக்காவின் உயிரி மருந்து நிறுவனங்களும் அவற்றிலிருந்து பலன் கிடைக்கலாம் என்று கிரில்லோவ் தெரிவித்தார்.