மே 11 பரமக்குடியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்
இராமநாதபுரம், மே 4- எமனேஸ்வரம் ஜீவா நகர் பட்டியலினத்தைச் சேர்ந்த கனக ராஜ் கொலை குறித்து விரைந்து விசாரணை நடத்த வேண்டும். அவ ரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மே 11 அன்று பரமக்குடியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் போராட்டம் நடத்தப்படு கிறது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் இராமநாத புரம் மாவட்டச் செயலாளர் நா. கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா எமனேஸ்வரம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் காந்தி. இவர் பட்டியலினத்தவர். இவரது மகன்கள் கனகராஜ், கர்ணன். அதே பகுதியைச் சேர்ந்தவர் கருப் புச்சாமி. இவரது மகன் துரை முருகன். இந்நிலையில் 30.4.2023 அன்று இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு பொருள் வாங்கிக்கொண்டிருந்த கனகராஜ், கர்ணன் ஆகியோரிடம் துரைமுருகன் வேண்டுமென்றே வம்பிழுத்து, அவர்களை தாக்கி னார். பின்னர் அவரது நண்பர் களான பர்மா காலனியை சேர்ந்த சரத், வினோத், முரளி, கீழாய்குடி யைச் சேர்ந்த முத்துக்குமார். அஞ் சாமடையைச் சேர்ந்த முத்துப் பாண்டி, கலை முருகன் மகன் அசோக் ஆகியோரை போனில் அழைத்துள்ளார். அவர்கள் வந்த தும் கைகலப்பாக மாறியது.
இதில் துரைமுருகன் தனது ஆட்டோவில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து கனகராஜை குத்தியுள்ளார், இரத்த வெள்ளத்தில் கனகராஜ் கீழே சாய்ந்தார். அருகில் இருந்த வர்கள் துரைமுருகனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கனகராஜ் உயிரிழந் தார். இந்த சம்பவம் அந்த பகுதி யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கொலை செய்யப்பட்ட கனக ராஜுக்கு விசித்திரா (22) என்ற மனைவியும், மூன்று வயதிலும், ஆறு மாதத்திலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த தக வல் அறிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் நா. கலையரசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மயில்வாகனன், பரமக்குடி தாலுகா செயலாளர் தி.ராஜா, தாலு காக்குழு உறுப்பினர்கள் பசலை நாகராஜ், முரளி, முனியசாமி, கிளைச்செயலாளர் சேகர், வாலி பர் சங்க நிர்வாகி ராஜேஷ், சிஐடியு நிர்வாகி வில்லியம்ஸ் ஆகியோர் கனகராஜ் குடும்பத்தினரை சந் தித்து ஆறுதல் கூறினர். அந்த குடும் பத்திற்கான இழப்பீட்டை உடனடி யாக வழங்க வேண்டும். கனக ராஜின் குழந்தைகள் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும். அவரது மனைவி விசித்ராவிற்கு அரசு பணி வழங்க வேண்டும். மேலும் உழைக்கும் பகுதி யினரான இரண்டு சமூகங்களுக்கு இடையில் இப்படியான தனிப் பட்ட சம்பவங்கள் நடப்பது பிளவை யும் பதற்றத்தையும் உருவாக்கும். எனவே இந்த கொலை குறித்து விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மே 11 அன்று பரமக்குடியில் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத் தப்படுகிறது. இதில் மாநிலத் தலை வர் டி. செல்லக்கண்ணு பங்கேற்று உரையாற்றுகிறார். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.