districts

img

எமனேஸ்வரம் கனகராஜ் குடும்பத்திற்கு நீதி, நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

பரமக்குடி, மே 12- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா எமனேஸ்வரம் ஜீவா நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளி கனகராஜ் குடும்பத்துக்கு நீதி மற்றும் நிவாரணம் கேட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள எமனேஸ் வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டத் தலைவர் வி.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் கொலை செய்யப்பட்ட கனகராஜின் மனைவி மற்றும் குடும்பத்தினர்-உற வினர்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத்தலைவர் த.செல்லக் கண்ணு, இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மாவட்டச் செயலாளர் என்.கலையரசன்,  சிவகங்கை மாவட்ட நிர்வாகி ஆர்.வீரய்யா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தட்சிணா மூர்த்தி,  இமானுவேல் சேகரன் பேரவை வேல்முருகன், விடுதலைச் சிறுத்தை கள்  பழனிக்குமார், தமிழ் புலிகள் கட்சி ராசா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் வி.மயில்வாகனன், தாலுகா செய லாளர் டி.ராஜா, ஜீவா நகர் கிளைச் செயலாளர் சேகர், எம்.ஆர். முரளி, வேலு, ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள், “கனகராஜ் மனைவிக்கு நீதி வழங்கவேண்டும். அவருக்கு வேலை- வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும் குழந்தையின் கல்விச் செலவைஅரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். கனகராஜ் கொலை செய்யப்பட்டதில் கைது  செய்யப்பட்டுள்ள துரைமுருகன் அளித்த வாக்குமூலத்தின் மற்ற நான்கு குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என வலி யுறுத்தினர்”.