மதுரை, மே 9- மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்க ளில் பலத்த மழை பெய்து வருவதால் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது மேலும் தெருப்பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பல இடங்க ளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்து வரு கின்றது. இந்த நிலையில் செவ்வாயன்று மாலை மதுரை தல்லா குளம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சிக்கு சொந்த மான எக்கோ பார்க் மற்றும் நீச்சல் குளம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அங்குள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. மதுரை காந்தி அருங்காட்சியகம் நீச்சல் குளம் பகுதி யில் உள்ள மரம் பெயர்ந்து விழுந்ததால் டாக்டர் தங்க ராஜ் சாலை மற்றும் காந்தி அருங்காட்சியம் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதித்து தீய ணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் உட்பட்ட பகுதி யில் பழைய மரம் மின்கம்பங்கள் மீது விழுந்தது அசம்பா விதம் எதுவும் நடக்காதவாறு தீயனைப்பு துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் காவல்துறையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.