மதுரை, மார்ச் 30- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன் றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன் சனிக்கிழமை அன்று காலை திமுக வடக்கு சட்டமன்ற உறுப்பின ரும் மாநகர் மாவட்டச் செயலாளருமான கோ.தளபதி, மாநில தணிக்கைக் குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப் பினருமான வி.வேலுச்சாமி, உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பெ.குழந்தை வேலு, காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மா.கணேசன், சிபிஐ மாவட்ட நிர்வாகி ராஜலட்சுமி, மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.முனிய சாமி, விசிக வடக்கு மாவட்டச் செயலாளர் சுடர் மொழி ஆகியோர் முன்னிலையில் புதூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.
பிரச்சாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகிலும் ஆரத்தி எடுத்தும் மலர்களை தூவி வரவேற்றனர். 14-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அந்தோணி அம்மாள், வட்டச் செயலாளர் ராயன் ஆகி யோர் தலைமையில் மலர் தூவி மாலை கள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலைகள் அணிவித்தும் கிரீடம் அணி வித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. தொடர்ந்து மதிமுக மாவட்டச் செய லாளர் எஸ்.முனியசாமி வேட்பாளர் சு. வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
முத்துராமலிங்கபுரம், சங்கர் நகர், ராமவர்மா நகர், மணல்மேடு மற்றும் டிஆர்ஓ காலனி பகுதிகளில் நூற்றுக்கணக் கான பெண்கள் சு.வெங்கடேசனை மலர் களை தூவி வரவேற்றனர். தொடர்ந்து மண்டலத் தலைவர் சரவண புவனேஸ் வரி, வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் வரவேற்றார். அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய ஜமாத்தார்கள் பல ரும் கைத்தறி ஆடை அணிவித்து தங்க ளுடைய கோரிக்கை மனுக்களை வேட்பா ளர் சு.வெங்கடேசனிடம் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து 12-ஆவது வார்டு பகுதியான காந்திபுரம், பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதியில் சு.வெங்கடேசன் வாக்குகள் சேகரித்தார். 10-ஆவது வார்டு கற்பகம் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சு.வெங்கடேசனுக்கு மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஆழ்வார் தலை மையில் மாலை அணிவித்தும் சுமார் நூற்றுக்கணக்கான பெண்கள் மலர்கள் தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
அந்தனேரி பகுதியில் உள்ள காட்டு நாயக்கர் சமூக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சம்பகுளம், அந்தனேரி, காட்டு நாயக்கர் காலனி ஆகிய பகுதிகளில் சென்று பிரச்சாரம் நிறைவடைந்தது.
பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் கருமலையான், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் மகாலட்சுமி, இரா.விஜய ராஜன், பகுதிக் குழு செயலாளர்கள் ஏ.பாலு, வி.கோட்டைச்சாமி, தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் சிதம்பரம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக், மூவேந்தர் முன் னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், ஆதித் தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.