மதுரை, மார்ச் 19- மதுரை ஆனையூரில் உயர் நீதிமன்ற உத்தரவு பெற்று அமைக்கப்பட்ட பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழா சனிக்கிழமை மாலை நடைபெற் றது. திமுக இளைஞரணிச் செய லாளரும் சட்டமன்ற உறுப்பின ருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்வில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பெ.கல்வி, தொழில்துறை அமைச் சர் தங்கம் தென்னரசு, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, திமுக மாவட்டச் செயலாளர்கள் பொன். முத்துராமலிங்கம், மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.