விருதுநகர், ஜூலை 31- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசானது, தலைநகர் தில்லி யில் ஒரு வருடமாக போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் மூன்று வேளாண் சட்டங் களை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித் தது. மேலும் விவசாய விளை பொருட்க ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் இயற்றுவதாக வாக்குறுதி அளித் தது. ஆனால், அறிவித்து ஓராண்டு நிறை வடைந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் மின்சார திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும். போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கினை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் ஜூலை 31 ஞாயிறன்று அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பல்வேறு மாவட்டங் களில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு ஒருங்கி ணைப்பாளர் பி.எஸ்.காளிதாஸ் தலைமை ஏற்றார். சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் வி. பாலமுருகன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.மனோஜ்குமார் மாவட்ட செயலாளர் வி.முருகன் ஆகியோர் பேசி னர். ஐந்து பெண்கள் உட்பட 77 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரமக்குடி
பரமக்குடி ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.மயில்வாகனன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எம்.முத்துராமு, சிபிஐ மாவட்ட செயலாளர் என்.எஸ்.பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை
மதுரை யா.ஒத்தக்கடையில் சாலை மறியல் போராட்டம் விவசாயிகள் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் நடை பெற்றது. இதில் சிபிஐ விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பா.காளிதாஸ், வி.சி.க. ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், மக்கள் அதிகாரம் பாண்டியராஜன், விவ சாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் வி.அடக்கிவீரணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஐக்கிய விவசாயிகள் முன்னணி மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தானம் தலைமையில் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் நாகராஜன். சிபிஐ விவ சாயிகள் சங்கத்தின் ரவிவர்மா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பி.அய்யாவு, ஏ.ஐ. கே.எம் மாவட்ட அமைப்பாளர் பகத்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.