திண்டுக்கல், ஜுன்.15- திண்டுக்கல் கொடைரோடு ரயில் நிலையத்தில் குரூவாயூர் மற்றும் கச்சி குடா ரயில் சேவை துவக்க நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண் டார். திருவனந்தபுரத்திலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் குருவாயூர் அதி விரைவு ரயில் மற்றும் மதுரையிலிருந்து ஆந்திரா மாநிலத்தில் உள்ள கச்சிகுடா செல்லும் வாராந்திர அதி விரைவு ரயில் கொடைரோடு ரயில் நிலையத்தில் ஒரு சில நிமிடங்கள் நின்றுசெல்லும். இதற்கான ரயில் சேவை விழா வியாழனன்று நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் வேலுச்சாமி வாழ்த்திப் பேச துவங்கியதும் அங்கிருந்த பாஜக வினர் வேலுச்சாமியை பேச விடாமல் கூச்ச லிட்டுக்கொண்டே இருந்தனர். இதனை யடுத்து அங்கிருந்த திமுகவினரும் எதிர் கோஷமிட்டனர். இரு தரப்பினரும் ஒரு வரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அபாய கரமான சூழல் நிலவியது. இதனை ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கண்டுகொள்ள வில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ரயில்வே போலீசார் அங்குவந்து இரு தரப்பினரையும் சமாதா னம் செய்தனர். பின்னர் வேலுச்சாமி பேசி னார். அதனையடுத்து அமைச்சர் எல்.முரு கனும் பேசினார். (ந.நி.)