திருவனந்தபுரம், ஜன.24- மாநிலங்களின் கடன் வரம்பை குறைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் சுகாதாரம் மற்றும் கல்வி உட் கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார். கேரள சட்டப் பேரவையில் அவர் தனது கொள்கை அறிவிப்பு உரையில், நிதி ஒழுக்கத்தை துல்லியமாக அமல் படுத்த வேண்டிய நிலையில், ஒன்றிய அரசுக்கு பொருந் தாத தரநிலைகளை மாநில அரசுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என கூறினார். அரசமைப்பு விழுமியங்களைப் பாது காக்க கேரள அரசு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஆளுநர் கூறினார். ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்மைத்துவ விழுமியங்கள் மற்றும் கூட்டாட்சி போன்ற அரசமைப்பின் அடிப்படைக் கொள்கைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதே சமயம் நமது அரசியலமைப்புச் சட்டம், ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் சட்டம் இயற்ற இட மளித்துள்ளது. சட்டமியற்றும் துறைகளில் மாநிலங்களின் மீதான அத்துமீறல் கூட்டுறவு மற்றும் கூட்டாட்சி முறைக்கு நல்லதல்ல. மக்களின் விருப்பம் சட்டமன்றங்கள் மூலம் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. சட்டத்தின் பொருள் மற்றும் சட்டமன்றங்களின் நோக்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டமன்றத்தின் நோக்கத்தை நடைமுறைப் படுத்தும் அரசமைப்பு மதிப்பைப் பாதுகாக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்று ஆளுநர் கூறினார்.