districts

img

தில்லி பேரணியும்... எல்ஐசி ஊழியர்களும்...

மதுரை, ஏப்.5-  ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோ தக் கொள்கைகளைக் கண் டித்து தில்லியில் புதனன்று நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தில்லியில் பேரணி துவங்  கிய அதே நேரத்தில் தேசம் காப்போம்... மக்களைக் காப்போம்... எல்ஐசி உள் ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களைப் பாதுகாப் போம் என வலியுறுத்தி மதுரை  மண்டல அகில இந்திய இன்  சூரன்ஸ் ஊழியர் சங்கத்தி னர் மதுரையில் கோரிப் பாளையம், திருநகர், டவுன்  ஹால் ரோடு உட்பட மக்கள்  அதிகமாகக் கூடும் இடங்க ளில் மக்களிடம் துண்டுப்பிர சுரங்களை விநியோகித்த னர்.  மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்க ளிலும் எல்ஐசி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை விநி யோகித்தனர். இதில் ஏராள மான அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க தோழர் கள் கலந்துகொண்டனர்.  முன்னதாக மதிய உணவு இடைவேளையின் போது எல்ஐசியின் மதுரைக் கோட்ட (செல்லூர்) அலுவல கத்தில் தில்லி பேரணியை வாழ்த்தியும், ஒன்றிய அர சின் மக்கள் விரோதக் கொள்  கைகளை அம்பலப்படுத்தி யும் கோட்டத் தலைவர் நா. சுரேஷ்குமார், துணைத் தலைவர் பி. மகாலிங்கம் தலைமையில் ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பி தங்க ளது ஆதரவைத் தெரிவித்த னர். திண்டுக்கல் எல்ஐசி அலு வலகத்தில் எஸ்.ஏ.டி.வாஞ்சி நாதன் தலைமையில் ஆத ரவு முழக்கங்கள் எழுப்பப் பட்டது.