மதுரை அழகர்கோவிலில் உள்ள உண்டியல்கள் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் திறந்து செவ்வாயன்று எண்ணப்பட்டது. இதில் காணிக்கையாக செலுத்தியிருந்த ரூ.56 லட்சத்து 10 ஆயிரத்து 139 ரொக்க பணமும், தங்கம் 101 கிராம், வெள்ளி 390 கிராமும் , வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன. இந்த உண்டியல் எண்ணும் நிகழ்வில் கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் துணை ஆணையர் சுரேஷ், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் அய்யம்பெருமாள், கண்காணிப்பாளர் சேகர், மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.