districts

மதுரை முக்கிய செய்திகள்

காரியாபட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி

காரியாபட்டி, ஜன.11- காரியாபட்டி அருகே தனியார் அப்பளக் கம்பெனி யில் மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது மல்லாங்கிணறு. இங்குள்ள திம்மண்பட்டியில் தனியா ருக்கு சொந்தமான அப்பளக் கம்பெனி உள்ளது. இதில்,  சூரம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி(30), கடம்பங்குளத் தைச் சேர்ந்த ராஜா(30) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், ராஜா என்பவர் மேலே சென்ற மின்சார  வயரை கவனிக்காமல் அலுமினிய ஏணியை கொண்டு சென்றுள்ளார். அப்போது, ஏணியில் மின்சாரம் பாய்ந்த தில் ராஜாவை மின்சாரம் தாக்கியுள்ளது. அப்போது, ராஜாவை பழனிச்சாமி காப்பாற்ற சென்றுள்ளார். அவரை  மின்சாரம் தாக்கியுள்ளது. இதையடுத்து, அக்கம் பக்கத்தி னர் இருவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்த மல்லாங்கிணறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜன.20 மீனவர் குறைதீர் கூட்டம் 

இராமநாதபுரம்,ஜன.11- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம்  வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்ப தாவது:  இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவர்களின் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரி மீனவ பிரதிநிதி களால் மாவட்ட ஆட்சித் தலைவரை கேட்டுக் கொண்ட தினைத் தொடர்ந்து, ஜனவரி 20  அன்று பிற்;பகல் 3.30 மணி யளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர், இராமநாதபுரம் அவர்களின் தலைமையில் கூட்டம் நடை பெற உள்ளது. அக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட அர சுத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர். அதனால்  இராமநாதபுரம் மாவட்டத்  திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் கலந்துகொண்டு  தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை  பெற்றிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மீன வர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

கொலை வழக்கு  குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நத்தம், ஜன.11- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டி யை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஜோதி. இவர் கடந்த நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிர பாகரன் என்பவர் கைது  செய்யப்பட்டு திண்டுக்கல்  சிறையில் அடைக்கப்பட்டி ருந்தார். இந்நிலையில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பாஸ்கரன் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சி யருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் குண்டர் சட்  டத்தின் கீழ் கைது செய்ய  மாவட்ட ஆட்சியர் விசாகன்  உத்தரவிட்டார். இதையடுத்து பிரபாகரனை குண்டர் சட்  டத்தில் கைது செய்த போலீ சார் மதுரை மத்திய சிறை யில் அடைத்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்  2021 முதல் பரிசை உரிய நபருக்கு வழங்கிடுக! மாவட்ட ஆட்சியரிடம் மனு

டம் மனு மதுரை, ஜன.11-  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2021 ஆம் ஆண்டின்  முதல் பரிசை நீதிமன்ற உத்தரவுப்படி உரிய நபருக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கருப்பண்ணன் மற்றும் ஜல்லிக்கட்டு பயிற்சி மைய நிர்வாகிகள் புத னன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தின் மேலூர் ஒன்றிய செயலாளரான கருப்பண்ணன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறை யாக நான் முதலிடம் பெற்றேன். ஆனால் அரசு விதிமுறை களை மீறி ஆள்மாறாட்டம் செய்து உள்ளே வந்த வேறொரு நபர் முதலாவது பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதை  எதிர்த்து  “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையம்” உதவி யோடு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு  பதிவு செய்யப்பட்டது. நீதிபதி அலங்காநல்லூர் விழாக்குழு  முடிவெடுத்து பரிசை வழங்கலாம் என்று தீர்ப்பளித்தார். ஆனால் இதுவரை பரிசை வழங்கவில்லை . ஜல்லிக்கட்டு பல்வேறு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறும் நிலையில், சட்டப்படி முறையாக அரசின் அனைத்து விதி முறைகளையும் பின்பற்றிய நபருக்கு சட்டப்படி  சேரவேண்டிய பரிசை, எந்தவொரு விதிமுறையும் பின்பற்றாமல் களமிறங்கியவருக்கு வழங்குவது ஜல்லிக்  கட்டு போட்டியின் வரம்பை மீறிய செயலாகும். மேலும்  பரிசு பெறுகின்ற நபர்கள் முறையாகப் பரிசு வாங்கு கிறார்களா, இல்லை முறைகேட்டில் உள்ளனரா என்பதை  சரிபார்த்த பின்பு பரிசை வழங்க வேண்டும் . மேற்படி முறை யற்ற வகையில் வந்த நபருக்கு இரண்டாவது பரிசை வழங்கியுள்ளனர் . முதல் பரிசான கார் இதுவரை வழங்க வில்லை. எனவே மேற்படி உயர்நீதிமன்ற உத்தரவினை மதிக்காமல் செயல்படும் அலங்காநல்லூர் விழா கமிட்டி னர் மீது தகுந்த நடவடிக்கையினை எடுக்க வேண்டும். எனக்கு சேர வேண்டிய முதல்பரிசான காரினை வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். என்று கருப்பண்  ணன் மற்றும் ஜல்லிக் கட்டு பயிற்சி மையம் நிர்வா கிகள் புதனன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தார்கள்.

பிறந்து 8 நாட்களே ஆன பெண்குழந்தை மரணம் காவல்துறை விசாரணை 

மதுரை, ஜன.11- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்ப நாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியர் காளீஸ்வரி - கருத் தப்பாண்டி. காளீஸ்வரிக்கு கடந்த 3ஆம் தேதி உசிலம்பட்டி அரசு  மருத்துவமனையில் முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 5ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்து  தாய் சேய் நலத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். இந்நிலையில் செவ்வாயன்று இரவு 10 மணியளவில் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்தனர்.  அதிகாலை 4 மணியளவில் மூச்சு பேச்சின்றி மயக்க நிலை யில் குழந்தை இருந்ததைப் பார்த்த தாய் காளீஸ்வரி உசி லம்பட்டி அரசு மருத்துவமனைக்கு  கொண்டு வந்தார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்க னவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த உத்தப்பநாயக்கனூர்  காவல்துறையினர் பெண்சிசுவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம்  குறித்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடைக்கானலில் அரசு ஆண்கள் கல்லூரி துவங்கிடுக! சட்டமன்றத்தில் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ கோரிக்கை

திண்டுக்கல், ஜன.11- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்  கள் அரசு கல்லூரி வேண்டும் என்று சட்டப்பேரவையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கோரிக்கை வைத்தார்.  புதனன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் பேசியதாவது: கொடைக்கானல் நகரில் வசிக்கும் மாண வர்களுக்கு அரசு கலைக்கல்லூரி வேண்டும். ஏற்கனவே பெண்களுக்கு அன்னை தெரசா பல்கலைக்கழக பெண்கள் கல்லூரி உள்ளது. ஆண்கள் பழனிக்கு செல்ல  வேண்டியுள்ளது. எனவே கொடைக்கானல் மாணவர் களுக்காக ஆண்கள் கல்லூரி திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, இப்போதைக்கு சாத்தியமில்லை. ஏற்கனவே ஆத்தூர் தொகுதியில் ஒரு கல்லூரியும், ஒரு கூட்டுறவு கல்லூரியும்  ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பழனியில் ஏற்கனவே 2 கல்லூரிகள் செயலபடுவதாகவும், தற்போது ஒதுக்க முடி யாது என்று தெரிவித்தார்.  கொடைக்கானலில் கல்லூரி அவசியம் தேவை கொடைக்கானல் நகரத்தில் வசிக்கும் மாணவர்கள் பழனியில் உள்ள கல்லூரியில் சேர்ந்து பயின்று வரு கிறார்கள். கொடைக்கானலில் இருந்து பழனிக்கு மூன்றரை மணி நேரம் பயணம் செய்து படித்துவிட்டு மீண்டும் மூன்றரை மணி நேரம் பயணித்து வீட்டுக்கு வரு வது தினசரி சாத்தியமில்லை. எனவே இந்த மாணவர்கள் பழனியில் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய கட்டா யம் உள்ளது. அல்லது வீடு எடுத்து தங்கி படிக்க வேண்டி யுள்ளது. இதற்காக மாணவர்களின் பண விரயம் ஆகி றது. கொடைக்கானலில் அன்னை தெரசா பல்கலைக்கழ கத்தில் இருபாலர் கல்லூரி துவக்கினால் கூட கொடைக்  கானல் பகுதி மாணவர்கள் உயர் கல்வியை தொடர  வாய்ப்பாக அமையும். ஏற்கனவே அங்கு கிறிஸ்டியன் கலைக்கல்லூரி இருந்தாலும். அது தனியார் கல்லூரி என்பதால் சாதாரண ஏழை எளிய மாணவர்கள் கூடுதலாக பணம் கட்டி படிக்க சிரமப்படுகிறார்கள். எனவே தான்  கொடைக்கானலில் ஏழை எளிய மாணவர்களின் கல்வியை  தொடர ஆண்களுக்கான அவசியம் தேவைப்படுகிறது என்  பதை உணர்ந்து அடுத்த ஆண்டாவது கொடைக்கான லில் கல்லூரி ஒதுக்கிட அரசு முன்வர வேண்டும் என்று  பொதுமக்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ள னர்.

ஜன.27 பழனி கோவிலில் குடமுழுக்கு

பழனி, ஜன.11-  பழனி முருகன் மலைக்கோவிலில் ஜனவரி  27ஆம் தேதி குடமுழுக்கு நிகழ்ச்சியும் பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரு நிகழ்ச்சி களையும் நடத்துவது குறித்து  திண்டுக்கல் மாவட்ட ஆட்சி யர் விசாகன் தலைமையில் ஜனவரி 11 புதனன்று ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவில் ஆணையாளர் நடராஜன், வட்ட  காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், வருவாய் அலு வலர் லதா, கோட்டாட்சியர் மற்றும் அறங்காவலர் குழு வினர்,  அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். குட முழுக்கு வை காண்பதற்கு அனுமதி சீட்டு பெறுவதற்கு இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த வர்கள் 3 ஆயிரம் பேர் குழுக்கள் முறையில் தேர்ந்தெ டுக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும் என்று  கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாடுபிடி வீரர்களை மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி

மதுரை, ஜன. 11- பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும் 16ஆம் தேதி பாலமேட்டிலும் 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற் பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் காளைகள் குத்தி படுகாய மடைந்ததால் உடனடியாக அவர்களை மீட்டு அளிக்கப்பட வேண்டிய முதலுதவி குறித்து ரெட்கிராஸ் அமைப்பினர் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.