தூத்துக்குடி, பிப்.4- தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பாரதி யார் வித்யாலயம் மேல் நிலைப் பள்ளியில் பணிபுரி யும் பட்டதாரி ஆசிரியர் ரமா தனது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி கோவிலுக்குச் செல்வ தற்கும் உறவினர் வீட்டு சடங்குகளுக்கு செல்வ தற்கும் பள்ளிக்கு விடுமுறை எடுப்பதைக் கண்டு இனி மேல் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்க ளை விமானத்தில் அழைத் துச் செல்வதாக கூறியி ருந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்து மாணவர்கள் விடு முறை எடுப்பது குறைந்தது. இதையடுத்து கல்விச் சுற்று லாவாக மாணவர்களை சென்னைக்கு அழைத்து செல்வதென முடிவு செய்த ஆசிரியர் ரமா, பள்ளி செய லர் ஏபிசிவீ. சண்முகம் அனு மதியுடன் பள்ளியின் பங்க ளிப்பு, நன்கொடையாளர் உதவியுடன் 12 மாணவர்க ளை இலவசமாக சென்னை க்கு அழைத்துச் சென்றார். வெள்ளிக்கிழமை காலை தூத்துக்குடி விமான நிலை யத்தில் இருந்து சென்னை க்கு விமானத்தில் சென்றனர். மாணவர்களுடன் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, ஆசிரியைகள் ரமா, சரஸ் வதி மற்றும் அந்தோணி ஆஸ்மின் ஆகியோர் சென்றி ருந்தனர். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மாரியப்பன், ஆவுடையப்பன், ரகுபதி, ஆறுமுகசாமி, சங்கரேஸ் வரி ஆறுமுகசாமி சங்கர பாகம், கெளரி சங்கர், ரவீந்திரன், மீனா ரவீந்திரன் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர். அங்கு வண்டலூர் உயிரியல் பூங்கா, வள்ளுவர் கோட்டம், மெரீனா கடற் கரை, தமிழ்நாடு முதல்வர் அவர்களின் நலத்திட்ட புகைப்படக் கண்காட்சியை யும் கண்டு களித்தனர். பின்னர் முத்து நகர் விரைவு ரயிலில் தூத்துக்குடி திரும்பினர். மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்க ளும் பெருமகிழ்ச்சி அடை ந்து ஆசிரியருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.