கரூர், டிச. 6 - கரூர் மாவட்டம் காந்திகிராமத்தில் முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்கம் துவக்க விழா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் இரா.முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் பெரு.உலகநாதன் பேசி னார். கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உள்ளனர். இவர்கள் இராணுவ கேண்டின் மற்றும் மருத்துவவசதிக்கு திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று வர உள்ளது. வயதான வர்கள் திருச்சி, நாமக்கல்செல்வதால் உடல்நிலை பாதிக் கப்படுகிறது. இதனால் கால விரயமும் ஏற்படுகிறது. மேலும் அவசர சிகிச்சைக்கு செல்லும்போது உயிருக்கு உத்தர வாதம் இல்லை. எனவே கரூர் மாவட்டத்தில் ராணுவ கேண்டீன் அமைத்திட வேண்டும். இசிஹச்எஸ் மருத்துவ வசதியை கரூர் மாவட்டத்தில் ஏற்படுத்திட வேண்டும். முன்னாள் படைவீரர் நல அலுவலகம் துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.