மதுரை, ஏப்.18- காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். போதுமான பணியாளர் களை நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்ப டையில் தொழிலாளர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும். 8 மணி நேர வேலை உரிமையை பறிக்கும் தொழிற்சாலை சட்ட திருத் தத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பாக புறநகர் கிளை தலைவர் அமர்ஜோதி தலைமையில் வேலை நிறுத்த அறிவிப்பு ஆர்ப்பாட் டம் செவ்வாயன்று நடை பெற்றது. அரசு போக்குவரத்து மதுரை மண்டல தலைமைய கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் ஏ. கனகசுந்தர் விளக்கிப் பேசினார். சிஐடியு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.லெனின் நிறைவுரையாற்றினார். நகர் கிளை தலைவர் பி .ஜெய பிரகாஷ் மற்றும் பலர் பங் கேற்றனர். இராஜபாளையம் கிளை 1 கிளை 2ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட் டத்தில் கிளை நிர்வாகிகள் சன்னாசி, பாண்டியராஜ், ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத் தின் கிளை நிர்வாகிகள் சிஐ டியு நகர கன்வினர் சுப்பிர மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.