மதுரை, செப்.23- மதுரை அரசு போக்கு வரத்து கழக தலைமையகம் அடிப்படை கட்டமைப்பு வச திகள் ஏற்கனவே குறைவாக உள்ளது என்று போக்கு வரத்து தொழிலாளர்கள் கூறி வருகின்றன. தற்போது பணிமனை யில் திரும்பும் திசையெங் கும் குப்பைகள் குவிந்து அவை அப்புறப்படுத்தப் படாமல் அசுத்தம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. மேலும் சாக்கடை கழிவு நீரும் வெளியேறி கொசுக் கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் தலைமை யகத்தில் நகர் மற்றும் புற நகர் பணிமனைகளில் இரவு பராமரிப்பு பணியில் உள்ள தொழிலாளர்கள் கூட பணி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. தலைமையகத்தில் அதி காலை, இரவு பணியில் வந்து ஓய்வெடுக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்களும் ஓய்வெ டுக்க முடியாமல் கடும் மன உளைச்சலால் பணியின் போது அதிக சோர்வு அடை யும் நிலை ஏற்படுகிறது. எனவே, மதுரை அரசு போக்குவரத்து கழக நிர்வா கம் உடனடியாக தலைமை யகத்தில் உள்ள குப்பை களை அகற்றவும் கழிவுநீர் கால்வாய் போன்றவற்றை முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அரசு போக்கு வரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) வலி யுறுத்தியுள்ளது.