districts

img

மதுரையில் நான்காவது ஆண்டாக திருநங்கையர்-திருநம்பிகள் குறும்படப் போட்டி

மதுரை, ஜூன் 5- மதுரையில் திருநங்கை யர்- திருநம்பிகள் குறும்பட போட்டிகளை நடத்த உள்ளதாக திருநங்கை கள் வளமைய அறங்காவ லர்களில் ஒருவரான பிரியா பாபு திங்களன்று நமது செய்தியாளரிடம் தெரி வித்தார். திருநங்கையர்-திருநம்பி கள் குறும்பட போட்டிகளை கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறோம். இது வரை தமிழ் மொழியில் மட்டுமே நடைபெற்றுவந்த குறும்படப் போட்டி நான்கா வது ஆண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் நடத்தத் திட்ட மிட்டுள்ளோம். தமிழக அரசு  நிறைய செய்திருந்தாலும், சமூ கத்தில் மெதுவான மாற்றம் நிகழ்ந்தாலும், இன்னும் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இந்தக் குறும் பட நிகழ்வு “சமூகம் திரு நங்கைகளைப் பார்க்கும் விதத்தில் மாற்றத்தைக் கொண்டுவர உதவும். இதற்கு ஊடகம் ஒரு வலுவான கருவி.  முதல் மூன்று ஆண்டுகள் நடத்தப்பட்ட போட்டிகளில், 60-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது. இதில் பரிசு பெற்றவர்களில் சிலர் பிரபலமான திரைப்படங்க ளில் இயக்குநர்களாக மாறியுள்ளனர்.  2018-ஆம் ஆண்டு பரிசோதனை முயற்சியாக ஆரம்பித்த இந்தப் போட்டி நான்காவது ஆண்டில் தொடர்கிறது.  நான்காம் ஆண்டு குறும் படப்போட்டி ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறு கிறது. இந்தக் குறும்படப் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சுமார் 450 திருநங்கைகள் பங்கேற்கின்றனர். மொத்தப் பரிசுத் தொகை ரூ. 2 லட்சம் என தீர்மானிக்கப் பட்டுள்ளது. 40 விருதுகள் வழங்கப்பட உள்ளது. 12 நடுவர்கள் பங்கேற்கின்றனர் என்றார். மதுரை மன்னர் கல்லூரி மற்றும் மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் திருச்சி ராப்பள்ளியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரி ஆகியவற்றுடன் புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டுள்ளனர்  இதன் மூலம் சமுதாயத்தில் மாற் றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவிக் கின்றனர்.