districts

img

கலசலிங்கம் பல்கலை.யில் விவசாயிகளுக்கு பயிற்சி

திருவில்லிபுத்தூர், டிச.29- திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்க லைக்கழகத்தில் ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப துறையுடன் இணை ந்து, டிஎஸ்டி–சீட்-எஸ்டிஐ-ஹப் புராஜக்ட் சார்பில், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை மூன்று நாள் இலவசப் பயிற்சி களை திருவில்லிபுத்தூர் தொகுதி ஆதி திரா விட மக்களின் வாழ்வாதார முன்னேற்றத் திற்காக நடத்தினர். பல்கலை துணைவேந்தர் முனைவர் ஆர். நாகராஜ் தலைமை வகித்தார். பதிவா ளர் முனைவர் வெ. வாசுதேவன், டீன் ஜேசு எட்வர்ட் ஜார்ஜ் வாழ்த்துரை வழங்கினார். புராஜக்ட் ஆய்வாளர் டீன் எம். முத்துக்கண்ணன், பயிற்சி ஏற்பாடுகளை விவரித்தார். “மர சாம்பல் மூலம் விவசாயத்திற்கு பயன்தரும் நுண்ணுயிர்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்தல்” என்ற தலைப்பில், விவசாயத்தின் முக்கியத்து வம், செயற்கை உரங்களின் விளைவுகள், இயற்கை உரங்களின் பயன்கள், தொழில் முனைவோருக்கான பயிற்சியும், விருது நகர் எம்எஸ்எம்இ, அதிகாரி எம்.முனி யாண்டி, பேராசிரியர்கள் ஆர். கண்ணன். வி. திவ்யா, கே. செல்வராணி ஆகியோர் வழங்கினர். புராஜக்ட் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். முரளி, வரவேற்றார். 50 விவசாயிகள், கூமாப்பட்டி, சுந்தர பாண்டியம் ஊர்களிலிருந்து மூன்று நாட்கள் வந்து பயிற்சி பெற்று பயனடைந்தனர். புரா ஜக்ட் ஆய்வாளர்கள் ஆர். கன்னிகாதேவி (தலைமை), என். ரஜினி, ஆர். கண்ணன், எஸ்.கே.போத்திநாதன் ஆகியோர் சிறப் பாக ஏற்பாடு செய்திருந்தனர். சான்றிதழ்களும், பயிற்சி கையேடு களையும் எம்.எஸ்.எம்.இ அதிகாரி எஸ். முனியாண்டி வழங்கினார்.