districts

img

முந்திரி தொழிலை நவீனமயமாக்க கேரள அரசு மாஸ்டர் பிளான் அமைச்சர்களுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை

திருவனந்தபுரம், ஜன.20-      தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் மற்றும் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் ஆகியோர் கலந்துகொண்ட உயர்மட்டக் கூட்டத்தில் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முந்திரி தொழிலை நவீனமயமாக்குவதற்கும், பல்வகைப்படுத்து வதற்கும் மாஸ்டர் பிளான் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தொழில்துறையை வலுப்படுத்த தேவை யான நிதி நடவடிக்கைகளை அரசு மேற் கொள்ளும். முந்திரி துறையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க நடந்த அமைச்சர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முந்திரி கார்ப்ப ரேஷன் மற்றும் காப்பெக்ஸின் செயல் திறனை மதிப்பீடு செய்ய தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் மற்றும் முதன்மை செய லாளர் ராஜேஷ் குமார் சின்ஹா ஆகியோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

முந்திரி தோட்டங்களிலிருந்து கிடைக்கும் கச்சா முந்திரி விலை உயர்வு மற்றும் இறக்கு மதி வரி ஆகியவை முந்திரி தொழிலை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் உற்பத்திச் செலவு மற்ற மாநிலங்களை விட இரண்டு மடங்கு அதிகம். நவீனமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்படாததே இதற்கு முக்கிய காரணம். சந்தைப்படுத்தல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் அடிப்படையில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்வதே மாஸ்டர் பிளானில் முக்கிய குறிக்கோளாக கருதப்படுகிறது. இதற்கு தொழில்முறை நிறுவனங்களின் உதவியும் பெறப்படும். முந்திரி கார்ப்பரேஷன் மற்றும் காப்பெக் ஸை மேற்பார்வையிடுவதற்கு ரியாப் (Public Sector Restructuring and Internal Audit Board (RIAB) of Kerala) பொறுப்பாகும். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இரு நிறுவனங்களுக்கும் உட்பட்ட தொழிற்சாலைகளில் ஒரு நாள் கூட வேலை இழப்பு ஏற்படவில்லை என நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்தனர். சர்வதேச சந்தையில் தரமான முந்திரியை மலிவு விலையில் கொள்முதல் செய்ய முந்திரி வாரியம் முயற்சிக்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அரசின் தலையீடால் உருவான ‘ஒரு முறை தீர்வு காணும் திட்டத்தை’ சில வங்கி கள் செயல்படுத்தவில்லை என தொழில் துறையினர் புகார் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். மாநிலத்தில் சிறு முந்திரித் தொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வங்கி கள் எடுத்துள்ள நடவடிக்கைகளைத் தணிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். தனியார் முந்திரி தொழிலுக்கு உதவும் வகையில் புதிய மறுமலர்ச்சி தொகுப்பை அரசு முன்பு அறிவித்தது. ரூ.10 கோடி வரையிலான கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்வ தற்கும், ரூ.2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு 50 சதவிகிதம் வழங்கியும், ரூ.2 கோடி முதல் 10 கோடி வரையிலான கடனு க்கு 60 சதவிகிதம் வரை வழங்கியும் ஒரு  முறை தீர்வை செய்வதற்கும் இந்த தொகுப்பு  திட்டத்தின் மூலம் உதவி கிடைக்கிறது. முந்திரி கார்ப்பரேஷன் தலைவர் எஸ்.ஜெயமோகன், காப்பெக்ஸ் தலைவர் ஜி.சிவ சங்கரப்பிள்ளை, தொழிற்சங்க தலைவர்கள் கே.ராஜகோபால், பி.துளசீதர குருப், அட்வ ஸ்ரீகுமார், ஏ.ஏ.அஜீஸ், பி.சுஜீந்திரன், ஜி.லாலு, கோகேத்து பாஸ்கரன், சூரநாத் ஸ்ரீகுமார், சஜி டி.ஆனந்த், தொழில் துறையினர் சங்க பிரதிநிதிகள், பூதேஷ், சுந்தரன், அனஸ், அஸ்கர் கான். முஸ்லியார் மற்றும் லூசியஸ் மிராண்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.