நாகர்கோவில், மார்ச் 26 சுற்றுலா தலமான கன்னியா குமரிக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக் கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வை யிட காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறை யில் நீண்ட வரிசையில் காத்து இருந் தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காம ராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா உள் பட அனைத்து சுற்றுலாத் தலங்களி லும் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந் தது. இதனால் பலத்த காவல் துறை பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா காவலர்களும் கடலோர பாதுகாப்பு குழும காவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.