மதுரை, மே 12- மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி பகுதிகளில் வியாழனன்று இரவு காற்று டன் மழை பெய்தது. மதுரை மேற்கு ஒன்றியம் சிறு வாலையை அடுத்துள்ள செல்லணக்கவுண்டன்பட்டி பகுதியில் வீசிய பலத்த காற்றால் பிரசாத் என்பவ ருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை இடிந்து தரை மட்டமானது. கோழிப்பண்ணையில் வளர்ப்புக்காக வைத்திருந்த 1000 கோழிக் குஞ்சுகள் இடிபாடுகளில் சிக்கி இறந்தன. வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தமக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டுமென பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.