districts

img

கடமலை அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற நிலையில் கழிப்பறைகள்

கடமலைக்குண்டு, அக்.31- தேனி மாவட்டம் கட மலைக்குண்டு கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு  ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வர்கள் நாள்தோறும் சிகிச்சை பெற்று செல்கின்ற னர். பிரசவ அறை, ஆப்ரே ஷன் தியேட்டர் வசதிகள் உள்ளதால் கர்ப்பிணிகள் மருத்துவமனையில் அதிக அளவில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.  மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை கள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. இத னால் துர்நாற்றம் வீசுகிறது. மருத்துவமனைக்கு வரும் பெண்கள் வேறு வழியின்றி சுகாதாரக் கேடான கழிப்ப றையை தொடர்ந்து பயன் படுத்தி வருகின்றனர். மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலைக்குண்டு அரசு மருத்துவமனையில் அமைக்  கப்பட்டுள்ள கழிப்பறை களை முறையாக சுத்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டுமென்கின்றனர் மக்கள்.