districts

img

கணிதத் திறனை மேம்படுத்தும் ‘மஞ்சாடி’ திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்: முதல்வர்

திருவனந்தபுரம், நவ.17- அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்கக் கணிதத் திறனை உறுதி செய்வதற்காக, கே டிஸ்க் தலைமை யில் தொடங்கப்பட்ட புதுமையான திட்ட மான ‘மஞ்சாடி’ அனைத்து பள்ளிக ளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப் படும். முதல் கட்டமாக, இந்த ஆண்டு 100 பள்ளிகளில் இத்திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் பரிந்துரைத்தார். நவகேரள கர்மா யோஜனா திட்டத்தின் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் பேசியமுதல்வர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகை யில், ``தூக்கி எறியப்படாத கேரளா’’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 26 முதல் 30 வரை ஒருமுறை தூய்மைப் படுத்தும் இயக்கம் நடத்தப்படும். நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டு வதை கண்டிப்பாக தடுக்க வேண்டும். நிலமற்ற மற்றும் வீடற்ற பயனாளிகளு க்கு நிலம் வழங்கும் லைஃப் திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட ‘மன சோதித்திரி சோதி’ முகாமை வலுப் படுத்த வேண்டும் என்றும் முதல்வர் கூறினார். லைப் திட்டத்தின் ஒப்பந்தம், கட்டு மானம் மற்றும் நிறைவு நிலைகளில் உள்ளாட்சி சுய-அரசு அமைப்புகளின் நேரடி ஈடுபாடு மிகவும் முக்கியமானது. பல்வேறு சமூக அமைப்புகளின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். இதில் அவர்களது பங்களிப்பை உறுதி செய்ய லைப் திட்டத்தில் சாத்தியமாக வேண்டும். பல்வேறு சமூக அமைப்புகளின் பங்களிப்பு ஒவ்வொரு கட்டத்திலும் இருக்க வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் கூறினார். அமைச்சர்கள் வி.சிவன்குட்டி, ஜெ.சிஞ்சுராணி, ரோஷி அகஸ்டின்,  கே.கிருஷ்ணன்குட்டி, வி.அப்துர் ரஹ்மான், வீணா ஜார்ஜ், நவகேரள கர்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.என். சீமா, தலைமைச் செயலர் வி.பி.ஜாய்  உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்ற னர்.