இராமநாதபுரம், ஏப்.27- தியாகி இமானுவேல் பேரவை மாநில இளைஞரணி அமைப்பாளர் மற்றும் ஐந்திணை மக்கள் கட்சியின் தலை வர்களில் ஒருவரான புலிப் பாண்டியன் உடல்நலக்குறைவின் காரணமாக கால மானார். இவரது மறைவு செய்தியறிந்து ஐந்திணை மக்கள் கட்சி தலைவர் ஊர்க்காவலன், தமிழ் புலிகள் கட்சியின் மாநிலத் தலைவர் நாகை திருவள்ளு வன், இமானுவேல் பேரவை மாநிலத் தலைவர் சந்திரபோஸ், விசிக, ஆதித்தமி ழர் பேரவை, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலச் செயலாளர் நா.கலையர சன், இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் மருத்துவர் வான் தமிழ் இளம்பரிதி, மாவட்ட துணை தலைவர் எம்.ராஜ் குமார், சிபிஎம் இராமநாதபுரம் தாலுகா செயலாளர் பி.செல்வராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.