நாகர்கோவில், மார்ச் 27- கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஆர்.தர்ம ரஜினி எழுதிய ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் மீன்பிடி தொழில் முனைவோரின் ஊக்கு விப்பு காரணிகள்’’ என்ற நூல் வெளியீட்டு விழா நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. நூலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பிச்சுமணி வெளியிட, பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கி ணைப்பாளர் டாக்டர் ஆறுமுகம் பெற்றுக்கொண்டார். அகஸ்தீஸ் வரம் விவேகானந்தா கல்லூரி தலைவர் மணி, கல்லூரி முதல்வர் ராஜசேகர், அய்யாவழி சமய தலைவர் பால பிரஜாபதி அடிக ளார் உட்பட பலர் இந்த நூலை எழுதிய ஆர்.தர்ம ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.