தேனி, ஏப்.23- கம்பம் பகுதியில் பலத்த காற்று டன் பெய்த மழையால் ஆயிரக்கணக் கான வாழை மரங்கள் ஒடிந்து சேத மானது. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத் தாக்கு பகுதியில் நெல், வாழை, திராட்சை, பீட்ரூட், கரும்பு போன்றவை முக்கிய விவசாயமாக விளங்குகிறது. தற்போது 3000 ஏக்கருக்கு மேல் செவ் வாழை, நாழி பூவன், பச்சை வாழை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கம்பம் புதுப்பட்டியைச்சேர்ந்த விவசாயி தினேஷ் என்பவர் கம்பம் அருகே அண்ணாபுரம் பகுதியில் இரண் டரை ஏக்கர் நிலத்தில் தென்னைக்கு ஊடுபயிராக சுமார் ஐந்தாயிரம் நாழி பூவன் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கம் பம், கூடலூர், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த வீசிய பலத்த காற்றில், விவசாயி தினேஷின் ஆயிரக்கணக் கான வாழைகள் ஒடிந்து சேதமானது. சேதமடைந்த வாழைகள் அனைத் தும் இன்னும் ஒரு வாரத்தில் தார்கள் வெட்டும் பருவத்தில் இருந்ததால் விவ சாயிக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள் ளது. இகுறித்து விவசாயி கொடுத்த தகவலைத்தொடர்ந்து சேதம் அடைந்த வாழைகளை கம்பம் புதுப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார், கம்பம் துணை தோட்டக்கலை அலுவலர் பழனிவேல்ராஜன் ஆகியோர்கள் சனிக்கிழமையன்று பார்வையிட்டு சேதத்தை மதிப்பிட்டு சென்றனர். பூதிப்புரம் பகுதியில் சன்னாசி யப்பன் மலைக்கோவில் செல்லும் சாலையில் புயல் காற்றால் தென்னை, வாழை பயிர்கள் சேதம் அடைந்தன. தகவலறிந்த போடி வட்டாட்சியர் அழகுமணி நேரில் பார்வையிட்டார்.