districts

img

மோடியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்த முயன்றவர்கள் மதுரையில் கைது

மதுரை, ஜன.30- 2002- ஆம் ஆண்டுப் பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கோத்ரா ரயில்  எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து  அந்த மாநிலம் நடைபெற்ற வன்  முறையில் 2,000-க்கும் மேற்பட்ட  சிறுபான்மை மக்கள் உட்படப் பலர்  படுகொலை செய்யப்பட்டனர். இந் தச் சம்பவத்தைப் பிபிசி தொலைக் காட்சி நிறுவனம் “இந்தியா மோடிக்கான கேள்விகள்” என்ற  தலைப்பில் ஆவணப்படமாகத் தயாரித்துள்ளது. கடந்த சில தினங்  களுக்கு முன் இந்த ஆவணப்படம் வெளிநாடுகளில் வெளியிட்டது. இந்த நிலையில் “இந்தியா மோடிக்கான கேள்விகள்” ஆவ ணப்படம் கேரளாவில் பல்வேறு இடங்களில் வெளியானது. தமிழ கத்திலும் பல்வேறு இடங்களில் பல்  வேறு சமூக அமைப்புகள் வெளி யிட்டு வருகின்றன. இதனொரு பகு தியாக மதுரையில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் ஞாயி றன்று ஜெயஹிந்த்புரம் பகுதி யில் பொதுமக்களுக்குத் திரையிடு வதற்கான காண்பிப்பதற்கான ஏற்  பாடுகளைச் செய்த நிலையில் காவல்துறையினர் உரிய அனுமதி யுடன் படத்தை வெளியிட வேண் டும் என்று கூறினர். இதையடுத்து திங்களன்று காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. மாலை அனுமதி தருவதாகக் கூறியிருந்த காவல் துறை திடீரென அனுமதியில்லை எனக் கூறிவிட்டது. தொடர்ந்து ஜீவா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிந்தனர். இந்த நிலையில் ஆவணப் படத்தை வெளியிட காவல்துறை அனுமதி மறுத்ததைக் கண்டித்தும். படத்தைத் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி  வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் செல்வா, மாவட்டத் துணைச் செயலாளர் வேல் தேவா, கௌதம் பாரதி நவீன் உள்ளிட்ட பலர் முழக்  கங்களை எழுப்பிப் போராட்டம் நடத்தினர். அவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.