திருவில்லிபுத்தூர்,மே 14- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் லயன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 201 மாண வர்களும் தேர்ச்சி பெற்றனர். இதில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர் பொன் அஜித், பூஜாஸ்ரீ, விஜயாமதி, யுவஸ்ரீ ஆகியோருக்கு பாராட்டு விழா பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, பள்ளி முதல்வர் சுந்தரமகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் அரிமா உறுப்பினர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.