திருவில்லிபுத்தூர். ஆக.11- திருவில்லிபுத்தூர் நண்பர்கள் சுழற் சங்கமும், சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. தலைவர் முருகதாசன், செயலாளர் டி,வி,கந்தசாமி, திட்ட தலைவர் என், எஸ்,வேலாயுதம் ஆகியோர முன்னிலை வகித்தனர். முகாமை கவுன்சிலர் செந்தில் வேல் பழனி துவக்கி வைத்தார். மாவட்ட துணை ஆளுநர் ராஜசேகர், மற்றும் மாவட்ட அலுவலர் தென்காசி மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமிற்கு வந்தவர்களில் 90, நபர்கள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.