சங்கரன்கோவில் ,ஜூலை 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சங்கரன்கோவில் திருவேங்கடம் தாலுகா குழுவின் செயலாளர், ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டக் குழு உறுப்பினர், விவசாயிகள் சங்கத் மூத்த தலைவர் தோழர் எம். எஸ்.நல்லுசாமி நோய்வாய்ப்பட்டு காலமானார். சங்கரன்கோவில் மேல நீவிதநல்லூர் அருகே சிதம்பரபுரம் கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தோழர் நல்லுசாமி உடலுக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம், தென்காசி மாவட்டச் செயலாளர் உ.முத்துப் பாண்டியன் ,திருநெல்வேலி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சுடலை ராஜ், எஸ்.பெருமாள், தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கணபதி, உச்சிமாகாளி, அசோக்ராஜ் மற்றும் மூத்த தலைவர்கள் ஜெயராஜ், பால்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.