தேனி, செப்.20- தேனி ஆட்சியர் அலுவலகத்தில், திரு மலாபுரம் ஊராட்சியில் அடிப்படை மற்றும் பராமரிப்புப் பணிகள் முடங்கியுள்ளது என்று புகார் தெரிவித்து ஊராட்சித் தலை வர் தலைமையில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமலாபுரம் ஊராட்சி மன்றத் தலை வர் கனிராஜா தலைமையில் ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பின்னர் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா விடம் அளித்த மனு விவரம்: திருமலா புரம் ஊராட்சியில் கடந்த நான்கு மாதங்க ளுக்கும் மேல் ஊராட்சி எழுத்தர் பணி யிடம் காலியாக உள்ளது. இதனால், ஊராட்சிக்கு உட்பட்ட 14 உட்கடைக் கிரா மங்களிலும் திட்டப் பணிகள், அடிப்படை மற்றும் பராமரிப்புப் பணிகள் முடங்கி யுள்ளதாவும், ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு நான்கு மாதங்களாகச் சம்பளம் வழங்கவில்லை. எனவும் மனுவில் தெரிவித்திருந்தனர்.