ஒட்டன்சத்திரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ஒட்டன்சத்திரம், ஜூலை 17- ஒட்டன்சத்திரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையத்தில் நாளை (19.7.2023 புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி ஒட்டன்சத்திரம், புதுஅத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, காப்பிளியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக்கிராமங்கள் மற்றும் சுற்றுப்புற குக்கிரா மங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தக வலை, ஒட்டன்சத்திரம் மின்வாரிய உதவி செயற்பொறி யாளர் எழில்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஜூலை 21 விருதுநகர் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விருதுநகர், ஜூலை 17- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூலை 21 வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுமென ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூலை 21 காலை 11 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெறும். இதில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கை களை மனுவாக அளித்து தீர்வு காணலாம் என்று தெரி வித்துள்ளார்.
மெதுவாக போகச் சொன்ன பேருந்து ஓட்டுநருக்கு கத்திக்குத்து
தேனி, ஜூலை 17- தேனியில் அருகே கிராம பகுதியில் காரை மெது வாக ஓட்ட சொன்ன அரசு பேருந்து ஓட்டுநரை கத்தியால் குத்தியதாக 3 பேர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேனி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தெரு வைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அரசு போக்குவரத்து கழ கத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்ப வத்தன்று சுரேஷ் வீரபாண்டி கோவில் கடையில் பூ வாங்கிக் கொண்டு நின்று கொண்டு இருந்தார். அப்போது ஆண்டிபட்டி சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த முரளி (வயது 29), கருப்பணன் (22), பிரேம்குமார் (27) ஆகியோர் காரில் அதிவேகமாக வந்தனர். அப்போது டிரைவர் சுரேஷ் பெரி யவர்கள் நடமாடும் பகுதியில் காரை வேகமாக ஏன் ஓட்டு கிறீர்கள்? என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சுரேசின் மூக்கில் கத்தியால் குத்தி னர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை விலக்க முயன்ற போது கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்ற னர். படுகாயமடைந்த சுரேஷ் க.விலக்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி
கரூர், ஜூலை 17 - கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள திருப்பதி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்(32). இவர் தனது தாய் மோகனா (65), அக்காவின் மகன் தருண்பிரசாத் (10) ஆகியோருடன் கரூரில் இருந்து கோவைக்கு, தாய் மோகனாவின் சிகிச்சைக்காக காரில் சென் றுள்ளார். கார் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் கரூர் - கோவை சாலையில் க.பரமத்தி அருகே உள்ள காருடையாம்பாளை யம் கிராமம் அருகே சென்றது. அப்போது கார் திடீரென நிலைதடு மாறி திருப்பூரிலிருந்து கரூர் நோக்கி வந்த தனியார் பேருந்து மீது பயங்கர மாக மோதியது. இதில் ராம்குமார், தருண்பிரசாத் உயிரிழந்தனர்.
மீனாட்சியம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
மதுரை, ஜூலை 17- மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள தெற்குமாசி வீதியில் ஜகிஸ் என்பவருக்கு சொந்தமான டிஜிஎம் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் மற்றும் அதற்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இந்நிலையில் திங்களன்று காலை திடீரென மேல்தளத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு பரவ தொடங்கியது. அந்த பகுதி முழுவதும் கரும்புகையானது. சம்பவ இடத்திற்கு திடீர்நகர், தல்லா குளம், அனுப்பானடி பகுதியிலிருந்து வந்த தீயணைப்புத்துறையினர் 6 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் சுவாசிக்க முடியாத அளவற்கு நெடி வீச தொடங்கியது. இதனால் நுரை அணைப் பான் இயந்திரம் மூலமாக புகையை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் 50 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலாகியது. இச்சம்பவம் குறித்து காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி கடந்த சில ஆண்டுகளாக தீ விபத்து சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்ற தால் மதுரை மாநகராட்சி சார்பில் பழைய கட்டிடங்களில் செயல்படும் குடோன்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நோட் டீஸ் அளிக்கப்பட்டன.
போலி பூச்சி மருந்து புழக்கம் தோட்டக்கலைத்துறை அதிகாரியை முற்றுகையிட்ட விவசாயிகள்
திண்டுக்கல், ஜூலை 17- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் மல்லிகைப்பூ செடிகளில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த தரமான பூச்சி மருந்து கடை திறக்கக்கோரி மல்லி கைப் பூ செடிகளுடன் தோட்டக்கலை இணை இயக்குநரை விவசாயிகள் முற்று கையிட்டனர். பூச்சிக்கொல்லி மருந்துகளால் இந்த ஆண்டு பூ விவசாயம் முற்றிலும் பாதித்த தாக கூறி தோட்டக்கலைத்துறை துணை இயக்குநரை முற்றுகையிட்டு விவசாயி கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் முருகத்தூரன்பட்டி, சுக்கன் செட்டிபட்டி, கந்தக்கோட்டை, சிங்கம்பட்டி பகுதிகளில் பிரதானமாக மல்லிகைப் பூ விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த மல்லிகைப்பூ செடிகளில் பலன் தரும் சமயத்தில் தற்போது கடுமையான நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாத காலமாக ஏற்பட்டுள்ள இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்த இயலவில்லை. இப்பகுதியில் தரமான பூச்சி மருந்து கிடைக்கவில்லை போலியான பூச்சி மருந்துகள் இருப்பதால் மல்லிகைப்பூ செடிகளை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியவில்லை. எனவே அரசு சார்பாக உரம் பூச்சிமருந்து கடைகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திங்களன்று தோட்டக்கலைத்துறை இயக்குநர் அலு வலகம் முன்பாக விவசாயிகள் போராட்டத் தில் ஈடுபட்டனர். எங்கள் பகுதியில் தர மான கம்பெனிகளின் பெயரில் போலியான பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்கப்படு கின்றன. இதனால் பூச்சி மருந்துகள் வேலை செய்யவில்லை. இதன் காரண மாக மேலும் நோய் தாக்குதலால் பாதிக் கப்படுகின்றன. எனவே அரசு சார்பாக பூச்சிக்கொல்லி மருந்துக்கடை அமைக்க வேண்டும். பூ விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் புத்தகம் வாங்க உண்டியல்கள் வழங்கல்
திண்டுக்கல், ஜூலை 17- திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்க மாணவர்கள் தங்க ளது பணத்தை சேமித்து வைத்திருப்ப தற்காக இலவச உண்டியல் வழங்கப்பட் டன. திண்டுக்கல் புத்தகத் திருவிழா வருகிற அக்டோபர் 5 முதல் அக்டோபர் 15 வரை திண்டுக்கல் டட்லி மேனிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. புத்த கத்திருவிழாவில் பள்ளி மாணவ மாண வியர்கள், தாங்களே சேமித்து புத்த கங்களை வாங்கிப் பயன்பெற ஏதுவாக இலவச சேமிப்பு உண்டியல் வழங்கும் திட்டத்தினை திங்களன்று திண்டுக்கல் கோட்டாட்சியர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் புனித மரி யன்னை மேனிலைப்பள்ளி மற்றும் எம்.எஸ்.பி சோலை நாடார் மேனி லைப்பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு உண்டியல்களை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் இலக்கி யக்களம் நிர்வாக செயலாளர் கண்ணன் வரவேற்றார். இலக்கியக்களம் தலைவர் பேரா. முனைவர் மனோகரன் உரையாற்றி னார். பொருளாளர் பேரா. மணிவண்ணன் நன்றி கூறினார். பள்ளி ஆசிரியர்கள் ஏ.எஸ். ஏ.சாமி மற்றும் பாலசந்தர் ஆகியோர் தங்க ளது மாணவர்களுடன் கலந்துகொண்டனர். இலக்கியக்கள துணைத்தலைவர் பேரா. முனைவர் சரவணன், செயற்குழு உறுப்பி னர் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
நத்தம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
நத்தம், ஜூலை 17- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புன்னப்பட்டி யை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி மகாலெட்சுமி (28). இவர் நேற்று முன்தினம் இரவு கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகாலெட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தகவலறிந்து வந்த நத்தம் போலீசார் இறந்த வரின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.
மண்டபம் அருகே விபத்தில் ஒருவர் பலி
இராமேஸ்வரம், ஜூலை 17- இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கிழக்கு தெருவை சேர்ந்த ரகுமான்கான்(43) ஆம்னி வேனில் கஜர பர்கீத்(45)நூர் நிஷா(40)சாதுன் அமளபீகா (24) உள்ளிட்ட 6 பேர் மண்டபத்தில் இருந்து ராமநாத புரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் தூத்தக்குடியில் இருந்து இராமேஸ்வ ரம் வந்த மீன் ஏற்றும் லாரியும் மோதி விபத்துக்குள்ளா னது. இதில் ஆம்னி வேன் உடைந்து சேதமடைந்து நிலை யில் மீன் ஏற்றும் லாரி சாலையில் குறுக்கே கவிழ்ந்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 7 பேரை மீட்பு ஆம்புலன்ஸ் மூலம் இராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், ஆம்னி வேன் ஓட்டுநர் ரகுமான்கான் வழியிலே உயிரி ழந்தார். லாரி ஓட்டுநர் மாணிக்கம்(40) அவருடன் வந்த இரண்டு பேர் என 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்த விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்கு
கடமலை-மயிலை ஒன்றிய கால்நடை மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை
கடமலைக்குண்டு, ஜுலை 17- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, கும ணன்தொழு, வருசநாடு உள்ளிட்ட 7 கிரா மங்களில் அரசு கால்நடை மருத்துவமனை கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக மருத்துவமனைகளில் கால்நடைகளுக் கான மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக கோழி மற்றும் நாய்களுக் கான தடுப்பூசி, மருந்து, மாத்திரைகள் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இத னால் மழை மற்றும் குளிர் காலங்களில் கோழி, ஆடு உள்ளிட்டவைகளுக்கு ஏதே னும் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் பொது மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்ற னர். அது போன்ற நேரங்களில் மருத்துவர் கள் பரிந்துரையின் பேரில் தனியார் மருந்துகடைகளில் அதிக பணம் கொடுத்து மருந்து மாத்திரைகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு ஒரு புறம் இருக்க, டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த சில மாதங்களாக ஒரு சில மருத்துவமனைகள் பூட்டிய நிலையி லேயே உள்ளது. எனவே அந்த கிராமங்க ளைச் சேர்ந்த பொதுமக்கள் கால்நடை களை வேறு கிராமங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இது போன்ற காரணங்களால் பொதுமக்களிடையே கால்நடைகள் வளர்ப்பு ஆர்வம் குறைந்து வருகிறது. மேலும் தொற்று நோய் ஏற்படும் நேரங்க ளில் நோய் பரவலுக்கு பயந்து கோழி, ஆடு உள்ளிட்டவற்றை பொதுமக்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்து விடுகின்ற னர். சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் கட மலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்துகால்நடை மருத்துவமனை களிலும் மருந்து, மாத்திரைகள் போது மான அளவில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுப்பதுடன் காலியாக உள்ள டாக்டர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் செப்டிக்டேங்க் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு
மதுரை, ஜூலை. 17- மதுரையில் மாநகராட்சியை கண்டித்து தனியார் செப்டிக்டேங்க் லாரி உரிமையாளர்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். மதுரை மாநகராட்சியில் 75 சதவீத பகுதிகளில் தனியார் செப்டிடேங்க் லாரிகள் மூலமாகவே மனிதக்கழீவுகள் அகற்றப்பட்டுவருகின்றன.. இந்த மனித கழிவுகளை கொட்டுவதற்காக ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கட்டணம் செலுத்தி மாநகராட்சி பகுதிகளில் 18 பம்பிங் ஸ்டேசன்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன.ஆனால் கடந்த ஓராண்டில் பம்பிங் ஸ்டேசன்கள் 3 ஆக குறைக்கப்பட்டன. தற்போது அதுவும் முழுமையாக முடக்கப்பட்டு தனியார் செப்டிக் டேங்க் வாகனங்கள் முடங்கியுள்ளது இதனால் தனியார் வாகனங்கள் மலக்கழிவுகளை கொட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் செப்டிங் டேங்க் லாரி் உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் பம்பிங் ஸ்டேசன்களை திறக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநகராட்சி பகுதிகளில் இருந்து மனிதகழிவுகளை அகற்றுவதில் சிரமம் ஏற்படும் நிலை உருவாகும். இந்நிலையில் மாநகராட்சி பம்பிங் ஸ்டேசன்களை திறக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து திங்களன்று மனு அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை மாவட்டம் மனித கழவுநீர் அகற்றும் வாகன மேலாண்மையாளர்கள் நலச்சங்கம் நிர்வாகிகள் கூறுகையில், மாநகராட்சி பம்பிங் ஸ்டேசன்களை திறக்கக்கோரியும், மாநகராட்சியை கண்டித்தும் வரும் புதன்கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்று தெரிவித்தனர்.