districts

img

மரணித்தவர்களை தூக்கிச் செல்ல பாதையில்லை

மதுரை, பிப்.12- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே  உள்ள போடி நாயக்கன்பட்டி, மேல் நாச்சி குளம், கீழ் நாச்சிகுளம் கரட்டுப்பட்டி கிரா மங்களில் வசிக்கும் ஒரு பிரிவினருக்கு தனி  சுடுகாடு கோட்டைமேடு-நரிமேடு இரண்டு கிராமங்களுக்கும் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சுடுகாட்டிற்குச் செல்ல முன்பு பெரியார் பாசன கிளை கால்வாய் வழியாக படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது. அதையொட்டியுள்ள கரையோரமாக மாயனத்திற்குச் சென்று வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிளைக் கால்வாய் அகலப்படுத்தப்பட்ட போது படிக்  கட்டுகள் இருந்த இடத்தில் மீண்டும் படிக் கட்டு அமைக்காமல் சமதளமாகப் பூசி விட்ட தால் மயானத்திற்கு செல்லும் வழி தடை பட்டுள்ளது.  இதனால் தற்போது நரிமேடு என்ற  கிராமத்தின் சாலை வழியாக வயல்வெளிக் குள் செல்ல வேண்டிய நிலையுள்ளது. கிராம  மக்கள் மதுரை ஆட்சியருக்கு மனு  அளித்ததன் அடிப்படையில் பொதுப்பணித் துறை மூலம் சிறுபாலம் அமைக்க உத்த ரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பணிகள் தாமதமாவதால் பழைய நிலையே நீடிக்கி றது. பாலத்தை விரைவாகக் கட்டி முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.