நாகர்கோவில், ஜன.12- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநக ராட்சி, கொல்லங்கோடு நகராட்சிக்கான வாக்காளர் பட்டி யல்களை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளி யிட்டார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் நகர்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலினை அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னி லையில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவர் கூறு கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விரிவுபடுத்தப் பட்ட நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் தரம் உயர்த்தப் பட்ட கொல்லங்கோடு நகராட்சிகளின் கவுன்சிலர்/ வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் ஆண்கள்-120670, பெண்கள் 123850, மூன்றாம் பாலினத்தோர்- 11 என மொத்தம்- 244531 வாக்காளர்கள் உள்ளனர். கொல்லங்கோடு நகராட்சியில் ஆண்கள்- 25303, பெண்கள்- 25576, மூன்றாம் பாலினத்தினர் 4 என மொத்தம் 50,883 வாக்காளர்கள் உள்ளனர்.
வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்ப்பதற்கான விண்ணப்பமோ, அல்லது பதியப்பட்டுள்ள ஒரு பெயருக்கோ அல்லது அப்பட்டிய லில் கண்ட விவரத்திற்கோ மறுப்புரை தர விரும்பு வோர், சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் தக்க கோரிக்கையோ மறுப்புரை யோ முதலில் தந்து அதன் மூலம் தக்க மாற்றத்தை வாக்காளர் பட்டியலின் இணையான பதிவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் குறிப்பிடப்பட்டுள்ள இறுதி நாள் வரை, மாற்றம் கோரி வரப்பெறும் கோரிக்கை கள் மற்றும் மறுப்புரைகளின் மேல், மேற்படி சட்ட மன்றத் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவல ரால் சேர்த்தல், நீக்கல் அல்லது திருத்தம் செய்து தரப் படும் ஆணைகள் உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் முறையாக பதியப்படும் என்று ஆட்சியர்தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.