districts

img

ஏப்.30 தமிழக முதல்வர் தேனி வருகை: முன்னேற்பாடு கூட்டம்

தேனி, ஏப்.21- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 30-ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதையொட்டி, மேற் கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலு வலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சி யர் க.வீ.முரளீதரன் தலைமை வகித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 30 அன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்து, தமிழக அரசின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு  துறைகளின் சார்பில்  அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளி களுக்கு வழங்கிட உள்ளார். விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல்,  விழா நடைபெறும் மைதானத்தை தயார் படுத்துதல், விழாவிற்கு வருகை தருகின்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிர முகர்களை வரவேற்பது, நலத்திட்ட உதவி கள் வழங்கிட ஏதுவாக பயனாளிகள் தேர்வு  செய்து, பட்டியல் தயார் செய்தல், முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டப்பணி கள் தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை துறை அலு வலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவ லர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர். தண்டபாணி, பெரியகுளம் சார் ஆட்சியர் செ.ஆ.ரிஷப்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், செய்தி  மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முக சுந்தரம் உட்பட அனைத்துத் துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.