districts

img

கொடைக்கானல் மலையில் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நில அபகரிப்பு

தேனி, ஜூலை 21-  கொடைக்கானல் அருகே வில்பட்டி மலை கிராமத்தில் உள்ள  நிலத்தை அபகரிப்பு செய்து கொலை மிரட்டல் விடுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்  வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீது  தேனி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் முனி யாண்டி (59). இவர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் தனது மனைவி சந்தான லட்சுமியின் பெயரில் 1ஏக்கர் 83 சென்ட் நிலம் உள்ளது. அதனை எனது மகளின் திருமணத்திற்காக வும், குடும்ப தேவைக்காகவும் விற்க முடிவு செய்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா கிரயம் செய்து கொள்வ தாக பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் மூலம் தொடர்பு கொண்டனர். பின்  னர் நிலத்தை ரூ.40 லட்சத்திற்கு கிரையம் பேசி அதற்கான பணத்தை 3 மாதத்தில் கொடுப்ப தாக தெரிவித்தனர்.

அதை உண்மை என நம்பி கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி யன்று ஓ.ராஜாவின் உறவினரும், அவரது பினாமியுமான பெரிய குளம் பேச்சிமுத்து பெயருக்கு பொது அதிகாரம் என்று அழைக் கப்படும் பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தோம். ஆனால் பேசியபடி பணத்தை தராமலும், நாங்கள் எழுதிக் கொடுத்த பவர் பத்திரத்தை வைத்து பெரிய குளம் தென்கரையை சேர்ந்த விஜய குமார் என்பவரது பெயருக்கு பெய ரளவில் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர். இதையடுத்து நாங்கள் எழுதிக் கொடுத்த பவர்  பத்திரத்தை ரத்து செய்து தாருங் கள் அல்லது எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் ரூ.40 லட்சத்தை தருமாறு கேட்டதற்கு, தர மறுத்த ஓ.ராஜா கொலை மிரட்டல் விடுத் தார். அதன் பின்னர் தான் ஏமாற்  றப்பட்டதை உணர்ந்து முதல மைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்தோம். ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கு மாறு தேனி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளருக்கு உத்தரவிட்டும், ஓ.பி.எஸ் மற்றும் ஓ.ராஜாவின் அர சியல் செல்வாக்கால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மோசடி செய்து அப கரிக்கப்பட்ட எங்கள் நிலத்தை மீட்டுத் தருமாறு, தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கும் ஓ. ராஜா, பேச்சிமுத்து, விஜயகுமார் ஆகிய 3 பேர் மீது தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.