தேனி, செப்19- தேனி மாவட்ட திட்டக் குழு கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவல கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா மாவட்ட ஊராட்சிக்குழு மற்றும் திட் டக்குழு தலைவர் க.ப்ரிதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பெ.ராஜபாண்டியன், நாரா யண பாண்டியன், பாண்டி யன், ம.வளர்மதி, ம.தம யந்தி, ஓ.தங்கராஜ்,பி.தின கரன், க.நயினார் முகமது, மு.பவானி, ஆர்.ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வறுமை இல்லாத வாழ்வாதாரம் நிறைந்த கிராம ஊராட்சி, நலவாழ்வு கிராம ஊராட்சி, குழந்தைகளின் நலன் கொண்ட கிராம ஊராட்சி, குடிநீரில் தன்னிறைவு அடைவது, சுத்தமான, பசு மையான கிராம ஊராட்சி, உட்கட்டமைப்பு வசதிகள் தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சி, சமூக நீதி மற்றும் சமூக பாதுகாப்பு நிறைந்த கிராம ஊராட்சி, சிறப்பான நிர்வாகம் நடைபெறும் கிராம ஊராட்சி, வளர்ச்சியில் பாலின சமத்துவ ஊராட்சி ஆகிய 9 தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (வளர்ச்சி) பிரகாஷ், மாவட்ட ஊராட்சி செயலா ளர்/திட்ட அலுவலர் மு. சிவகுமார், உதவி இயக்கு நர் (ஊராட்சிகள்) அண்ணா துரை மற்றும் நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.