districts

img

தேனி மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம்

தேனி, ஜன.11- தேனி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன் முன்னிலையில், கண்காணிப்புக்குழு தலைவரும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ப.ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஊராட்சித்தலைவர் க.பிரிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா. தண்டபாணி, முதன்மைக் கல்வி அலுவலர் செந்தி வேல்  முருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணா துரை, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) (பொ) இராஜா ராம், மற்றும் அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலு வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் ,ஒன்றிய அரசு சார்ந்து செயல்படுத்தப் பட்டு வரும் திட்டங்கள், மாநில அரசுடன் இணைந்து அத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதனை கண்காணித்து, அத்திட்டங்கள் முழுமையாக பொதுமக்களை சென்றடையவும், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற் கொள்ள வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் கேட்டுக் கொண்டார்.