districts

img

அரசு மருத்துவமனை, ரேசன் கடைகளில் தேனி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

தேனி, ஏப்.8-                 போடியில் அரசு மருத்துவமனை, வட்  டாட்சியர் அலுவலகம், நியாய விலைக்  கடைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவியர் விடுதியின் செயல்பாடு கள் குறித்து தேனி  மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா சனிக்கிழமையன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். போடிநாயக்கனூர் அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, மருத்துவ உபகரணங் கள், அதன் செயல்பாடுகள், உள் நோயாளி கள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற  வருகை தந்த பொதுமக்களின் எண் ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்  றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து கேட்டறிந்தார். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்குத் தேவை யான குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆய்வு மேற்கொண்டு, சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாகவும், சுகா தாரமாகவும் பராமரித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, சின்னமனூர் நகராட்சிப்பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவியர் விடுதியில் பணியா ளர்கள் எண்ணிக்கை, வருகை பதிவேடு, விடுதியில் மாணவர்கள் தங்கும் அறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை, குடி நீர் வசதி, விடுதியில் தங்கும் மாணவர் களின் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு, உணவின் தரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது, சின்னமனூர் நக ராட்சி நகர் மன்றத்தலைவர் ரா.அய்யம் மாள், போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அழகுமணி, சின்னமனூர் நகராட்சி ஆணை யாளர் கணேசன் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.