தேனி ,ஜூன்.3- முன்னாள் முதல்வர் கலைஞர் கருணா நிதி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு 360 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி களை தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன் வழங்கினார். தேனி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) அவர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி, 360 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர்.தண்டபாணி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் தங்கவேல் (பெரியகுளம்), எம். சக்கரவர்த்தி (தேனி), தேனி-அல்லிநகரம் நக ராட்சி நகர்மன்றத்தலைவர் பா.ரேணுப் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர், தூய்மைக்கான மக்கள் இயக்கம் தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பங்களாமேடு பகுதியில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன் னிலையில்; நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை தொடங்கி வைத்து, தொடர்ந்து தூய்மைக்கான உறுதிமொழி யினை எடுத்துக்கொண்டார்.