கடமலைக்குண்டு, ஏப்.12- தேனி மாவட்டம் மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு ஊழி யர்கள் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சத்து ணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் கும ரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செய லாளர் ஜெயக்குமார், ஆண்டிபட்டி வட்ட கிளை வாரிய தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ரவி நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வு ஊதியம் ரூ.9,000 வழங்க வேண்டும் ,எரிவாயு சிலிண்டர் தேவைக்கு ஏற்ப அரசே வழங்கிட வேண்டும், காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படை யில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.