மதுரை, அக்.8- சனாதனத்தை ஆதரித்துப் பேசி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை அண்ணா பல்க லைக்கழகத்தில் நடைபெற்ற திருக் குறள் மாநாட்டில் திருக்குறள் குறித்து முரணாக பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு அரசியல் கட்சி யினர் மற்றும் பல்வேறு அமைப்பி னர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். இந்நிலையில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் ஆளு நருக்கு திருக்குறள் புத்தகங்களை அனுப்பும் இயக்கத்தை சனிக்கிழ மையன்று நடத்தியது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் எதிரில் உள்ள தபால் நிலை யத்தில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி. செல்வா தலைமை யில் இந்த இயக்கம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக், மாநில செயற்குழு உறுப் பினர் என். நிருபனா, மாவட்ட பொரு ளாளர் அ. பாவெல் சிந்தன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதிக்குழு செயலாளர்கள் கலந்து கொண்டு திருக்குறள் புத்தகத்தை தபால் மூலம் ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். சிவகங்கை சிவகங்கை தலைமை தபால் அலுவலகத்திலிருந்து வாலி பர் சங்கத்தினர் திருக்குறள் புத்த கத்தை ஆளுநருக்கு அனுப்பினர். நடந்தது. மாவட்டக்குழு உறுப்பி னர் முனீஸ்வரன் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் சுரேஷ், அருண், வன்னிமுத்து, ராம கிருஷ்ணன், சுதாகரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.இளை யான்குடியில் பரிசுத்தம் தலைமை யில் நடைபெற்றது.