முல்லைப் பெரியாறு அணையில் 131 அடியாக குறைந்த நீர்மட்டம்
தேனி, ஜன.22- முல்லைப்பெரியாறு அணையில் நீர்வரத்தின்றி தண்ணீர் திறப்பால் நீர்மட்டம் 131.50 அடியாக குறைந்து விட்டது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 94 கன அடி யாக குறைந்துள்ளது. இதனால் நீர் மட்டம் 131.50 அடியாக குறைந்துள்ளது. எனவே அணையில் இருந்து திறக்கப் படும் தண்ணீரின் அளவு 1467 கன அடியில் இருந்து 1400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. வைகை அணை யின் நீர் மட்டம் 52.62 அடியாக உள்ளது. அணைக்கு 1154 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாச னத்துக்காக 1069 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 50.95 அடியாக உள்ளது. 37 கன அடி நீர் வருகிறது. 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 110.37 அடியாக உள்ளது. 8 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
ஜன.24 போராட்டத்தில் திரளாக பங்கேற்பீர்!
திமுக மாவட்டச்செயலாளர் கோ.தளபதி அறிக்கை
மதுரை, ஜன.22- மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை கால தாமதம் செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டத்தில் திமுக கட்சி யினர் திரளாக பங்கேற்குமாறு திமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் -சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி கேட்டுக்கொண் டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மதுரை தோப்பூரில் அமையவுள்ள மருத்துவமனை பணிகளை காலதாமதம் செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து ஜன வரி 24 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணி அளவில் பழங்காநத்தம் ரவுண் டானா நடராஜ் தியேட்டர் அருகில் மதுரை மாநகர் மாவட்டம் திமுக கூட்டணி கட்சி களின் சார்பில் மாபெரும் தொடர் முழக்க போராட்டம் நடைபெறுகிறது. மதுரை மாந கர் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக , வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள் , நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப் பினர்கள், கழக முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புக்கள் அனைவரும் திர ளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மார்க்கெட் பாமாயில், பருப்புகளின் விலை சற்று குறைந்தது
விருதுநகர், ஜன.22- விருதுநகர் சந்தையில் பாமாயில், துவரை, உளுந்து, பாசிப் பருப்பு, மசூர் பருப்பு ஆகியவற்றின் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்திய வாசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளி யிடப்பட்டு வருகிறது. இதில் கடந்த வாரம் 15 கிலோ பாமா யிலின் விலையானது ரூ.1515க்கு விற்கப்பட்ட வந்த நிலை யில் தற்போது ரூ.1500க்கு விற்கப்படுகிறது. துவரம் பருப்பு : இதேபோல் கடந்த வாரம் 100 கிலோ துவரம் பருப்பு புதுஸ் லையன் வகையானது ரூ.11 ஆயி ரத்திற்கு விற்பனையான நிலையில் இந்த வாரம் ஆயிரம் ரூபாய் குறைவு ஏற்பட்டு ரூ.10ஆயிரத்திற்கு விற்கப்படு கிறது. இதேபோல், 100 கிலோ மசூர் பருப்பின் விலை யானது கடந்த வாரம் ரூ.10ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.500 குறைந்து ரூ.9500க்கு விற்பனை செய்யப்படுகிறது. உளுந்து : கடந்த வாரம் 100 கிலோ உருட்டு உளுந்தம் பருப்பின் ( நாடு பர்மா ஏப்.ஏ.க்யூ) விலையானது ரூ.9400க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் ரூ.200 குறைந்து தற்போது ரூ.9200க்கு விற்கப்படுகிறது. இதேபோல் தொலி உளுந்தின் விலையும் கடந்த வாரத்தை விட ரூ.200 குறைந்த தற்போது ரூ.9200க்கு விற்கப்படுகிறது. பாசிப் பருப்பு : கடந்த வாரம் 100 கிலோ பாசிப் பருப்பு ரூ.9800க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.200 குறைந்து இந்த வாரம் ரூ.9600க்கு விற்பனை செய்யப்படு கிறது. இதற்கான காரணம் குறித்து வியாபாரிகள் கூறுகை யில், பாசிப் பயறு, உளுந்து மற்றும் துவரம் பருப்பு ஆகி யவை உள் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு தற்போது அறுவடை முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து சந்தைக்கு பருப்பு வகைகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை சற்று குறைந்துள்ளது என்று தெரிவித்த னர். அதேவேளை பிற உணவுப் பொருட்களின் விலை யில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் 33 ஆவது பட்டமளிப்பு விழா
சிவகங்கை, ஜன.22- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்க லைக்கழகத்தில் 33 வது பட்டமளிப்பு விழாவில் 1125 மாணவ - மாணவிகளுக்கு தமிழக ஆளுனர் ரவி பட்டங்கள் வழங்கினார். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் பேராசிரியர் ரவி வரவேற்றுப் பேசினார் . பல்கலைக்கழக வேந்தரும் ஆளுநருமான ரவி பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை வகித்து மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார் . ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார். விழாவில் தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்பட்டமளிப்பு விழாவில் மொத்தம் ஒரு லட்சத்து 9616 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 1125 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் நேரடியாக வழங்கப்பட்டது . இவ்விழாவில் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் முனைவர் சுவாமிநாதன், டாக்டர் ராஜா ,முனைவர் குணசேகரன், பேராசிரியர் பழனிச்சாமி, ஆட்சி பேரவை குழு உறுப்பினர்கள் பர மக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், முனை வர் ரகுபதி, முனைவர் செந்தில்குமார் ,முனைவர் கருணா கரன் ,முனைவர் நடராஜன் ,புல முதன்மையர்கள் ,திரு வாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் சுப்பையா ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிர முகர்கள் கலந்து கொண்டனர் .மேலும் காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினர் மாங்குடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, காரைக்குடி நகர மன்ற தலைவர் முத்துத்துரை சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மது சூதன் ரெட்டி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கணிதத்துறை வளாகத்தில் ராமானுஜன் உயர் கணித மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கணித மேதை சீனிவாச ராமானுஜன் அவர்களின் மார்பளவு சிலையை தமிழக ஆளுநர் திறந்து வைத்தார்.
விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு
இராமநாதபுரம், ஜன.22- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் இராமநாதபுரம் தாலுகா அளவிலான அமைப்பு கூட்டம் என் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது மாவட்ட தலைவர் என்.கலையரசன் பேசினார். தாலுகா தலைவராக என்.வெங்கடேஷ், செயலாளராக ஆர். அழகேந்திரன் ,பொருளாளராக முத்துராமலிங்கம், நிர்வாகிகளாக எம்.பி.இளங்கோவன், எம்.முத்துக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இராமநாதபுரம் தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலையை பதிவு செய்த அனை வருக்கும் வழங்கி சட்டக் கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு
காரியாபட்டி, ஜன.23- காரியாபட்டி அருகே பேருந்தில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீ சார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள மேலதுலுக்கன்குளத்தைச் சேர்ந்தவர் கன்னி யம்மாள்(63). இவர், காரியாபட்டியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக கல்குறிச்சியில் இருந்து காரியா பட்டி பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தில் இருந்து இறங்கியதும் பார்த்த போது கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் நகை மாயமானது தெரியவந்தது. இதுகுறித்த புகா ரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முடிவடையாத திட்டப் பணிகளால் மக்கள் துயரம்
இராஜபாளையத்தில் 12 மையங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
இராஜபாளையம், ஜன.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜபாளையம் நகரச் செயலாளர் மாரி யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராஜபாளையம் நகரத்தில் பாதாள சாக்கடை திட்டம். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம். ரயில்வே மேம்பால திட்டப்பணி கள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடை பெற்று வருகிறது. 2020, 2021 ஆம் ஆண்டு நிறைவு பெற வேண்டிய பணிகள் தற்போது வரை நிறைவடையவில்லை. இப்பணிகள் முறையான திட்டமிடல் இல்லாமல், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு இல் லாமல் நடைபெற்று வருவதால் ராஜபாளை யம் நகர மக்கள் கடந்த ஐந்து ஆண்டு களாக சொல்லொண்ணா துயரத்தை அனு பவித்து வருகின்றனர். இப்பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப் படாததால் குறிப்பிட்ட காலத்திற்குள் சாலை கள் சரி செய்யப்படாத நிலைமை இருப்ப தால் தினசரி விபத்துக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இப்பணி துவங்கிய காலத்தில் இருந்து பலர் விபத்துக்குள்ளாகி கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் உயிரிழந்தனர். அனைத்து திட்டப்பணிகளும் மார்ச் மாதம் நிறைவடைந்து ஏப்ரலில் பயன்பாட் டிற்கு வரும் என்று வருவாய் துறை அமைச் சரும் சட்டமன்ற உறுப்பினரும் அறிவித்தி ருந்தனர். ஆனால் திட்டப் பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. இந்த நிலையில் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் நிறைவடையாமல் இருக்கிற சூழ்நிலையில் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் வரியை மூன்று மடங்கு உயர்த்தி உள்ளது. மாதம் 50 ரூபாயாக இருந்த வரி 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சொத்து வரி தமிழ்நாட்டி லேயே அதிகமாக வரி விதிக்கும் நகரமாக ராஜபாளையம் உள்ளது. சென்னையை (12.40 சதவீதம்)விட அடிப்படை வரி விகிதம் அதிகமாக (20.80 சதவீதம்) உள்ளது. இவ் வரி விகிதத்தை குறைக்க வேண்டுமென நகர்மன்றம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக தீர்மானம் நிறைவேற்றியது. சட்ட மன்ற உறுப்பினரும் 2022-23 பட்ஜெட் கூட்டத் தொடரில் இது குறித்து பேசி வரியை குறைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தினார். ஆனால் இதுவரை வரி யும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் திடீ ரென கடந்த வாரம் கூடிய நகர்மன்றம் 20.5.22 ஆம் தேதியன்று வரியை குறைப்ப தற்காக போடப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து 12.1.23 ஆம் தேதி புதிய தீர்மானம் நிறைவேற்றியது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராஜபாளையம் நகர் முழு வதும் சுகாதார சீர்கேடு நிறைந்து உள்ளது.
எனவே, ராஜபாளையம் நகரில் நடை பெற்று வரும் திட்டப் பணிகள் அனைத்தை யும் விரைந்து முடிக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த பொன் இருளப்பன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இதுவரை பாதிக்கப்பட்டவர்களை கணக்கீடு செய்து அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். திட்டப் பணிகளுக்காக சேதப்படுத்தப் பட்டுள்ள அனைத்துச் சாலைகளையும் விரைவில் சீரமைக்க வேண்டும். வராத தண்ணீருக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திலேயே அதிகமாக வரி விதிக்கும் ராஜபாளையம் நகராட்சியில் அடிப்படை வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் கழிவு நீர் கால்வாய்கள் தண்ணீர் செல்ல முடியாமல் நிறைந்து போய் உள்ளது. அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை ராஜபாளை யம் நகரில் 12 மையங்களில் மாபெரும் மக் கள் போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.