மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவையை துவங்கிட கோரி டிசம்பர் 14 அன்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் துவங்கிய காத்திருக்கும் போராட்டம் 37 ஆவது நாளாக ஜனவரி 19 அன்று நடைபெற்று வருகிறது. போராட்டத்தில், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலத் துணைச் செயலாளர் விஜயமுருகன், அய்யம்பட்டி பன்னீர்செல்வம், கிராம பெண்கள் கலந்து கொண்டனர்.