districts

img

விஷவண்டு கடித்து கிராம நிர்வாக அலுவலர் பலி

திருவில்லிபுத்தூர், மே 28- விருதுநகர் மாவட்டம் திரு வில்லிபுத்தூர் அருகே முல்லை  நகர் புதுத்தெருவை சேர்ந்தவர் இந்திராகாந்தி (54). இவர் திரு வில்லிபுத்தூர் அருகே மல்லி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். முல்லை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற இந்திரா காந்தியை விஷ வண்டு கடித்தது  இதையடுத்து அவரை திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இந்திராகாந்தி உயிரி ழந்தார். இதுகுறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

;