districts

மதுரை முக்கிய செய்திகள்

 காலமானார்

திருநெல்வேலி, நவ. 27-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட மூத்த தோழர் பத்தமடை மீனாட்சி டீச்சர்  சனிக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு   கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர்  க.ஸ்ரீராம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், பெருமாள், துரைராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் குட்டன்,  சுப்பிர மணியன், சேரன்மாதேவி செயலாளர் அருள் பாலு,  கோமதி நாயகம், பட்டமுத்து, ரவி, பக்கீர் முகைதீன்,  மாலதி  மற்றும் முத்துகிருஷ்ணன், அபுபக்கர், பசுபதி, ராம்சேகர் ஆகியோர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பெண்கள் மீதான  வன்முறை எதிர்ப்புப் பேரணி

நாகர்கோவில், நவ.27- கன்னியா குமரி மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தின பேரணி குழித்துறையில் நடந்தது. கூட்டமைப்பு உறுப்பினர் கிளாடிஸ் லில்லி தலைமை வகித்தார். பேரணியை விஜயலட்சுமி தொடங்கி வைத்தார். பேரணி தபால் நிலைய சந்திப்பில் இருந்து வெட்டுமணி வரை நடந்தது. வெட்டுமணி அந்தோணியார் ஆலய கலையரங்கத்தில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டமைப்பு தலை வர் சகுந்தலா, ஜோஸ்பின், காவியா, சுஜா ஜாஸ்பின், செயலாளர் சுஜா ஆகியோர் பேசினர். பள்ளி, கல்லூரி அருகில் போதைப் பொருட்கள் விற் பதை தடை செய்ய வேண் டும். பெண்கள் மீதான வன் முறை சார்ந்த வழக்குகளை ஆறு மாத காலத்தில் முடிக்க வேண்டும், பேருந்து நிலையம் மற்றும் பெண் கள் அதிகமாக கூடும் இடங்க ளில் காவல்துறை கண்கா ணிப்புடன் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாலையை கடக்க முயன்றவர் பலி

திருநெல்வேலி. நவ. 27- திருநெல்வேலி  ரகுமான்பேட்டை முதலாவது வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர் (53). இவர் கங்கை கொண்டானில் உள்ள மான்கள் சரணா லயம் அருகே வேலைக்குச் சென்றிருந்தார். வேலையை முடித்துவிட்டு இரவில் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு செல்வதற்காக சாலையைக் கடந்துள் ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரி யாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வாலிபர் தற்கொலை

தூத்துக்குடி, நவ.27- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இனா மணியாச்சி, புது காலனியைச் சேர்ந்தவர்  காளிமுத்து (45). புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந் நிலை யில் ஞாயிறு அதிகாலை ஒரு மணியளவில்  வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் கிருஷ்ணா நகர் ரயில்வே பாலம் - பெத்தேல் ஹோம் இரயில்வே கேட் இடையில் அமைந்துள்ள தண்டவாளம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். பின்னர் பெங்களூர் - நாகர்கோவில் விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி இருப்புப் பாதை காவல்துறையினர் விசாரிக் கின்றனர்.

சுகாதார விழிப்புணர்வு  கலை நிகழ்ச்சி

அருமனை, நவ.27  கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஒன்றியம் கழுவன்திட்டை சந்திப்பில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சுக வாழ்வுமையம், குழித்துறை அரசு மருத்துவமனை, மேல்புறம்  ஆரம்ப சுகாதார மையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பாகோடு பேரூராட்சித் தலைவர் ஜெயராஜ், மருதன் கோடு ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன், தங்கராஜ்  வார்டு உறுப்பினர்கள் செல்வின்,   நந்தினி சமூக சேவர்கள்  மைக்கேல் தாஸ், பென்னட் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

பச்சையாற்றை  தூர்வாரக் கோரிக்கை

 திருநெல்வேலி, நவ.27- திருநெல்வேலி மாவடடம் களக்காடு அருகே மேல வடகரை பச்சையாறு பல ஆண்டுகளாக தூர்வாரப் படாததால் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் குளங்க ளுக்கு தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்படுவதுடன், ஆற்றில் வெள்ளம் வந்தால் கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இங்குள்ள உறை கிணறுகளைச் சுற்றி புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள் ளன. இங்கிருந்துதான் களக்காடு நகராட்சிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. எனவே பச்சை யாற்றை தூர்வார வேண்டும் என மக்களை தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனித வள திறன் மேம்பாட்டு சேவை மையம் திறப்பு

தூத்துக்குடி, நவ.27- தூத்துக்குடியில்  எம்ஏஎஃப்ஓஐ- பியர்ல் குரூப் ஆப் கம்பெனி சார்பில் மனித வளம் திறன் மேம்பாட்டு சேவை  மையம் திறப்பு விழா டி எஸ் எப் பிளாசாவில் நடை பெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை பியரல் ஷிப்பிங் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குநர் எட்வின் சாமு வேல் வரவேற்றார்.  சேவை மைய இயக்குநர் லதா பாண்டி யராஜன். தூத்துக்குடி சேவை மைய நிர்வாக இயக்குநர் நிவேதா ராபின் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள். நேச்சுரல் நிர்வாக இயக்குநர் சி.கே. குமாரவேல் சேவை மையத்தை தொடங்கி வைத்தார். நிகழ்வில் சேவை மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மா.ஃபா. பாண்டியராஜன் மனித வளம் திறன் மேம்பாட்டு சேவை மையத்தின் நோக்கம் குறித்துப் பேசினார். இந்நிகழ்வில் மக்களவை உறுப்பினர் கனிமொழி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆலங்குளம் ஜஸ்டிஸ் பொறியியல் கல்லூரி தாளாளர் எழில் வலன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரியா தொகுத்து வழங்கினார். விழா முடிவில் தூத்துக்குடி சேவை மைய நிர்வாக இயக்குநர் நிவேதா ராபின் நன்றி கூறினார்.

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே மர்மப் பொருளால் பரபரப்பு

திண்டுக்கல், நவ.27- திண்டுக்கல் ரயில் நிலையம் குட்செட் பகுதியில் அனுமந்த நகர் செல்லும் பாதையில் சாலையின் ஓரத்தில்  சிவப்பு நிறத்தில் ஒரு வெடிகுண்டு போல ஒரு மர்மப்  பொருள் கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலையடுத்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக் கப்பட்டனர். அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.  வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தனர். வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பி விடப்பட்  டன. திண்டுக்கல் ரயில்வே போலீசார், திண்டுக்கல் வடக்கு போலீசார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த  பொருளை பார்வையிட்டனர். சிவப்பு நிறத்தில் உள்ள  பிளாஸ்டிக் பந்தில் வெள்ளை நிறத்தில் திரி போலவும்,  அது இன்சுலேசன் டேப் போல ஒட்டப்பட்டு இருந்தது.  முதலில் உள்ளூர் வெடிகுண்டு சோதனை செய்யும் போலீ சார் அதனை ஆய்வு செய்ததும் சந்தேகமடைந்தனர்.  இதனையடுத்து மதுரையில் உள்ள வெடிகுண்டு நிபு ணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்தனர். எந்த ஒரு சிக்ன லும் கிடைக்கவில்லை. மோப்ப நாய் லீமா மர்ம பொருள்  அருகே சென்று மோப்பம் பிடித்தது. பின்னர் ஏதும் இல்லை  என்பது போல் அமர்ந்து கொண்டது. இதனையடுத்து போலீசார் மர்மப் பொருளை ஒரு அலுமினிய பாத்தி ரத்தில் எடுத்துச்சென்றனர். (நநி)

தென்காசி மாவட்டத்தின் தேவைகள்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பட்டியல்

தென்காசி, நவ.27- தென்காசியில் அனைத்துத் துறைக ளின் மாவட்ட அலுவலகங்களை உடனடி யாக அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தென்காசியில்  அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பேரவை மாவட்டத் தலைவா் திருமலை முருகன் தலைமையில் நடை பெற்றது. மாநிலத் துணைத் தலைவா் கோ.பழனியம்மாள் பேரவை துவக்கி வைத்தார். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள் ஆகியோருக்கு வரை யறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டிருக்கும் நான்கு லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியி டங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். தென்காசி மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மாவட்ட அலுவல கங்களை உடனடியாக அமைப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மேலும், திருநெல்வேலி- தென்காசி நான்கு வழிச் சாலை பணிகளை விரைவில் முடிப்பது,

தென்காசி நகருக்குள் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலைச்  சாலை அமைக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கால்நடை மருத்து வக் கல்லூரி, வேளாண் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்தக்  கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பாவூா்சத்திரத்தில் குளிர்பதன வேளாண் சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும். செங்கோட்டை - கோயம்புத்தூர் இடையே இயக்கப்பட்ட அதிவிரைவு ரயிலை மீண்டும் இயக்கவேண்டும். செங் கோட்டை - மதுரை பயணிகள் ரயிலை ஏற்கனவே இயங்கி வந்த முறைப்படி இயக்க வேண்டும். செங்கோட்டை - சென்னை இடையே கூடுதல் ரயில் வசதி செய்து தரவேண்டும். சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்தைப் பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் துணைப் பொதுச் செயலா ளர் என்.வெங்கடேசன் , மாவட்டச் செயலா ளர் துரைசிங், பொருளாளா் வேல்ராஜன்,   மாவட்டத் துணைத் தலைவா் பாலசுப்பிர மணியன், வி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இளம் கம்யூனிஸ்டுகளுக்கு பயிற்சிப் பட்டறை

புதுக்கோட்டை, நவ.27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் இளம் கம்யூனிஸ்டுகளுக்கான பயிற்சிப் பட்டறை புதுக் கோட்டை கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. ‘திராவிட இயக்க வரலாறு’ என்ற தலைப்பில் ஏ.சரவணன் தலைமையில் நடைபெற்ற வகுப்பில் எஸ்.கவிவர்மன் உரையாற்றினார். ‘அடையாள அரசியல்’ என்ற தலைப்பில் கஸ்தூரி தலைமையில் நடை பெற்ற வகுப்பில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ உரையாற்றினார். ‘இந்திய வரலாற்றில் இளை ஞர்கள்’ என்ற தலைப்பில் ஆர்.மகாதீர் தலைமையில் நடைபெற்ற வகுப்பில் மாநில  கல்விக்குழு உறுப்பினர் எம். ரெஜிஸ்குமார் உரையாற்றி னார். கு.ஜெகன் தலைமையில் ‘இலக்கை நோக்கி’ என்ற தலைப்பில் நடைபெற்ற வகுப் பில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.குமாரவேல் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் நிறைவுரையாற்றினார். ஜெ. மாணிக்கம் நன்றி கூறினார். வகுப்பில் நூற்றுக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.

சாதி ஒழிப்பு போராளிகள் நினைவு தின கூட்டம்

தஞ்சாவூர், நவ.27 -  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் சாதி ஒழிப்பு போராளிகள் நினைவு நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம், மாவட்ட அமைப் பாளர் சித. திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் மருத. உதயகுமார் வரவேற்றார்.  பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரையாற்றி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வேலுச்சாமி, ரெங்கசாமி, கந்தசாமி, சிபிஐ, தமிழக மக்கள் புரட்சிக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி,  தமிழ் வழிக் கல்வி இயக்கம், அறநெறி மக்கள் கட்சி, திரா விடர் கழகம், பெரியார் அம்பேத் கர் மக்கள் கழகத்தினர் பலர்  கலந்து கொண்டனர். ஒன்றியத் தலைவர் அ.கோ வேந்தன் நன்றி கூறினார்.

பன்னாட்டு பயிலரங்கம் நிறைவு விழா'

தஞ்சாவூர், நவ.27 -  தமிழ்ப் பல்கலைக்கழக இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி மற்றும் தஞ்சாவூர் நெருஞ்சி இலக்கிய இயக்கம் இணைந்து ‘இலக்கியமும் பிற துறைகளும்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பன்னாட்டுப் பயி லரங்கம் நிறைவு விழா மற்றும்  தமிழ்ப் ஒப்பிலக்கியக் கழகம்  தொடக்க விழா தமிழ்ப் பல் கலைக்கழகத்தில் நடை பெற்றது. இவ்விழாவில், தமிழ் ஒப்பி லக்கியக் கழகத்தைத் தொடங்கி வைத்து தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள்  துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ம.திருமலை உரை யாற்றினார். பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன்  முன்னிலை வகித்தார்.  கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் வரலாற்று துறை பேராசிரியர் இரா.உதய சந்திரன் வாழ்த்துரை ஆற்றி னார். திண்டுக்கல் காந்தி கிராமியப் பல்கலைக்கழகம், இந்திய மொழிகள் மற்றும் கிராமியக் கலைகள் பள்ளி  தமிழ்ப் பேராசிரியர் ப.ஆனந்த குமார் பேசினார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி

பொன்னமராவதி, நவ.27 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதியில் உள்ள பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்று வரும் நீட் பயிற்சி மையத்தை புதுக் கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் மணிவண்ணன் பார்வையிட்டு ஆய்வு  செய்தார். பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளி களில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வட்டார அளவி லான நீட் இலவச பயிற்சி மையம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தில் சனிக்கிழமை பயிற்சி தொடங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா பயிற்சியை தொடங்கி வைத்தார். நீட் பயிற்சி  மைய ஒருங்கிணைப்பாளர் வசந்தி, ஆல வயல் ஆசிரியர் கணேசன், இயற்பியல் ஆசிரி யர் சோமநாராயணி, சடையம்பட்டி ஆசிரியர்  மீனாட்சி ஆகியோர் நீட் பயிற்சியின் அவ சியம் குறித்து உரையாற்றினர். மேலைச்சுவபுரி, பொன்-புதுப்பட்டி, ஆல வயல், நகரப்பட்டி, மேலத்தானியம், சடை யம்பட்டி காரையூர் ஆகிய அரசு பள்ளி களின் மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்ற னர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நீட் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.