தேனி, ஜன.21- சிறுபான்மை மதத்தின ரின் கல்வி ,அரசியல் உரி மையை மோடி தலைமையி லான பாஜக அரசு பறித்து விட்டதாக தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங் கிணைப்பாளர் பேரா.அருணன் தெரிவித்துள்ளார். தேனியில் நகர் ஜமாத் கமிட்டி சார்பில் தேனி புது பள்ளிவாசலில் மீலாது நபி சமய நல்லிணக்கப் பெரு விழா பொன்ராஜ் கொந்தா ளம் தலைமையில் சனிக் கிழமை நடைபெற்றது . கூட் டத்தில் சமய நல்லிணக்க சிறப்புரையாற்றி, தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேரா.அருணன் பேசியதா வது: பிற மதத்தவரின் உணர்வு களை. உரிமைகளை மதிக்க வேண்டும் .அதற்கு நபியின் வாழ்வியல் நல்ல உதார ணம். பெரும்பான்மை சமூக மாக இஸ்லாம் மாறி, மெதி னாவில் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பிற மதத்தவரை மதிக்க வேண்டும் என்ற பிரகட னத்தை வெளியிட்டவர், ஆட்சியை ஏற்றுக் கொள்கிற யூதர்களுக்கு தேவையான உதவியை செய்வதாக அறி வித்தார்.'
உமர் ஆட்சி
ஜெருசேலத்தில் மன் னன் கலீபா உமர் திருக்கல்ல றைத் தேவாலயத்தில் பேரா யருடன் நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது தொழுகை நேரம் வந்தது. அப்போது பேராயர், ஆல யத்தில் தொழுகுமாறு சொல்லி யுள்ளார். ஆலயத்தில் தொழுதால்,பின்னர் ஒரு காலத்தில் கலீபா உமர் இந்த ஆலயத்தில் தான் தொழு தார் என்று சொல்லி ஆல யத்தை சொந்தம் கொண்டா டுவர் என்று சொல்லி வெளி யில் சென்று தொழுதார். கலீபா அலி ஆட்சி காலத்தில் அவ ரது போர் கவசத்தை கிறிஸ் தவ மதத்தை சேர்ந்த ஒருவர் எடுத்து விட்டார் என்று கூறி வழக்கு தொடுத்தார். நீதி மன்ற விசாரணையில் மன்ன ரின் உறவினர் சாட்சியை ஏற்றுக் கொள்ளாமல் கிறிஸ் தவ மதத்தை சேர்ந்தவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி யது. மன்னரும் ஏற்றுக் கொண் டார். இதனால் மனமாற்ற மடைந்து கிறிஸ்தவர் போர் கவசத்தை மன்னனிடம் திரும்ப ஒப்படைத்து விட்டார். இவ்வாறு அரபு நாடுகளில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வந்துள்ளனர் . ஆனால் 1949 ஆம் ஆண்டுகளில் பாபர் மசூதி யில் ராமர் சிலையை ஒழித்து வைத்துவிட்டு, ராமர் இங்கு தான் பிறந்தார் என்று கூறி மசூதியை இடித்தார்கள்.ஆனால் நீதிமன்றம் மசூதி யை இடித்தது கிரிமினல் குற்றம். இடித்தவர்களுக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங் கியது.
சங் பரிவார் அமைப்புகள் இந்தியாவில் சமூக, மத நல்லிணக்கத்தை கெடுத்து வருகிறது .உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களை இரண் டாம் தர குடிமக்களாக நடத்தி வருகிறார்கள் .ஒன்றிய அரசு சிறுபான்மையின மாண வர்களுக்கு வழங்கி வந்த உதவித்தொகையை நிறுத்தி விட்டது. வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் மாண வர்களுக்கு வழங்கும் கட னுக்கு வட்டி மானியத்தை யும் நிறுத்தி விட்டது .உத்த ரப்பிரதேச மாநிலத்தில் ராம் பூர் தொகுதி இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள தொகுதி ஆகும். அங்கு போட்டி யிட்ட சமாஜ்வாதி கட்சி வேட் பாளர் வெற்றி பெற்று 3 ஆண்டுகளுக்கு பின் அவ ரது பதவி பறிக்கப்பட்டு இடைத் தேர்தல் வருகிறது .அதில் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுகிறார் .அங்கு 33 சதவீத வாக்குப்பதிவு மட் டும் நடைபெற்று அவர் வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட்டார். 67 சதவீத மக் கள் வாக்களிக்க செல்ல முடி யவில்லை .இவ்வாறு சிறு பான்மை மக்களுக்கு கல்வி மற்றும் அரசியல் உரிமை யை பாஜக அரசு பறித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசி னார். இந்நிகழ்ச்சியில் திமுக தேனி வடக்கு மாவட்டச் செய லாளர் தங்க.தமிழ்செல்வன் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்டச் செய லாளர் ஏ.வி.அண்ணாமலை, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சர வணக் குமார் ,நகர் மன்ற தலைவர் ரேனுப்பிரியா பால முருகன் ,மாநில ஜமாத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாக்கவி , சமூக நல்லிணக்க பேரவை தலைவர் மு .முகமது சபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.