districts

திருக்காக்கரையில் எல்டிஎப் வெற்றி பெறும் யூடிஎப்-பாஜக உடன்பாடு பலனளிக்காது

கொச்சி, மே 25- திருக்காக்கரை இடைத்தேர்தலில் எல்டிஎப் மகத்தான வெற்றி பெறும் என்றும், யூ.டி.எப்-பா.ஜ.க உடன்பாடு தொகுதி மக்களால் நிராகரிக்கப்படும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கொடியேரி பால கிருஷ்ணன் கூறினார். ஐக்கிய முன்னணி யின் கோட்டையான அருவிக்கரை யில் எல்.டி.எப் வெற்றி பெற்றுள்ள நிலை யில், இம்முறை திருக்காக்கரையில் மிகப்பெரும் வெற்றிபெறும் என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரி வித்தார். திருக்காக்கரையில் எல்.டி.எப். வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை யடுத்து, அத்தொகுதியில் எல்.டி.எப்பு க்கு சாதகமான அலை ஏற்பட்டுள்ளது. டாக்டர் ஜோ ஜோசப்புக்கு நேர்மறை யான நல்ல ஆதரவை மக்கள் கொடுத்து வருகிறார்கள். இதையெல் லாம் வாக்குகளாக மாற்றும் வகையில் தேர்தல் களத்தில் அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் பல வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால், எல்.டி.எப்-க்கு எதிராக புனிதமற்ற கூட்ட ணியை அமைக்க யூடிஎப் முயற்சிக் கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையின் கூட்டு நடவடிக்கையின் பகுதியாக யூடிஎப் வேட்பாளர் பாஜக அலுவலகத்திற்குச் சென்று கும்மனம் ராஜசேகரனிடம் வாக்கு கேட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தரங்கில் இருந்து கே.வி.தாமஸை வெளியேற்றிய காங்கிரஸ், பாஜக அலுவலகத்துக்குச் சென்று வாக்குக் கேட்ட திருக்காக்கரை யுடிஎப் வேட்பா ளர் மீது நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேட்டார். இது ஒரு தனிச் சம்பவம் அல்ல. சில நாட்களுக்கு முன்பு திரிபுனித்துராவில் இரண்டு உள்ளாட்சி இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற னர். பதிலுக்கு காங்கிரசுக்கு ஆதரவாக கொஞ்சம் வாக்குகளை பெற முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு-வருகின்றன. பாஜகவுடன் மட்டுமின்றி எஸ்டிபிஐயு டன் இணைந்து பரந்த இடதுசாரி எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயற்சிக்கிறது. இந்த நகர்வுகள் எதுவும் வெற்றியடையப் போவ தில்லை. திருக்காக்கரை வாக்காளர் கள் படித்தவர்கள் மற்றும் அரசியல் சிந்தனை உள்ளவர்கள். எனவே இது போன்ற நகர்வுகளை முறியடித்து திருக் காக்கரையில் டாக்டர் ஜோ ஜோசப் வெற்றி பெறுவார் என்றார்.